1889ல் [[உதகமண்டலம்|உதகமண்டலத்தில்]] ஒரு ஏழை [[தலித்பறையர்]] குடும்பத்தில் பிறந்த முனுசாமி வறுமையின் காரணமாக படிப்பினை நிறுத்தி விட்டு இளவயதிலேயே எழுத்தர் வேலையில் சேர்ந்தார். பின் 1925ல் சொந்தமாக தொழில் தொடங்கினார். 1926ல் தாழ்த்தப்பட்டஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாக [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு]] நியமிக்கப்பட்டார். 1937-39ல் அமைந்த [[ராஜாஜி]] அமைச்சரவையில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] இந்தியா ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இத்துடன் முனுசாமியும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின் 1946ல் மீண்டும் அரசியலில் நுழைந்த அவர் [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின்]] உறுபின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952]] நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பில் [[திண்டிவனம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1953ல் இவர் மரணமடைந்த போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.