விஜயரகுநாதன் ([[விஜயகாந்த்]]) கிராமத்தில் வசிக்கும் இளகிய மனமுள்ள நிலக்கிழார், இவருடன் தம்பி பாலுவும் (ராஜா) தாயும் (ஜானகி (நடிகை)|ஜானகி) வசித்து வருகின்றனர். ஏழை விவசாயியை கொலை செய்த குற்றத்திற்காக மச்சினன் ஜெயராமனை ([[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]]) சிறைக்கு அனுப்புவதன் மூலம், மாமாவுடன் ([[ஆர். சுந்தர்ராஜன்]]) பகை உண்டாகிறது. விஜயரகுநாதனும் தன் மருமகள் கல்யாணியும் (கஸ்தூரி) குழந்தை பருவம் முதலே காதல் வளர்க்கின்றனர். விஜயரகுநாதன் கிராம சங்க தேர்தலில் மைத்துனன் சீதாராமனுக்கு, பக்கபலமாக இருக்கிறார். சீதாராமனுக்கும், விஜயரகுநாதனுக்கும் தேர்தல் நேரத்தில் பகை உண்டாக, சீதாராமன் தன் மகள் கல்யாணிக்கும் பம்பரம் பாண்டுவுக்கும் ([[விவேக்]]) திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கிறார். திருமண நாளன்று, சீதாராமனின் அடியாட்களை அடித்துவிட்டு கல்யாணியை மணம்முடிக்கிறார் விஜயரகுநாதன்.
பாலுவுக்கும் கல்யாணியின் சிறிய தங்கை காவேரியுடன் காதல் வயப்படுகிறார். இதனால் பாலுவுக்கும் விஜயரகுநாதனுக்கும் பகை உண்டாகிறது.