[[பாரத்துவாசர்]] பிரகசுபதியின் மகன். ரிக்வேதத்தில் 60 சூக்தங்கள் செய்தவர். இவர் ஆன்மீக சக்தியை ஆதரிப்பவர் அல்ல. “எங்கள் உடல் பாறையைப் போன்று இருக்கட்டும்! என வேண்டுகிறார் [ரிக்வேதம் 6-75-12]. இவர் ரிக்வேத கால மன்னர்களான திவோதாசு மற்றும் சுதாசு ஆகியவர்களின் புரோகிதர். திவோதாசின் மகன் சுதாசுவின் மூலம் வசிட்டரைக் கொண்டு [[அசுவமேத யாகம்|அசுவமேதயாகத்தை]] செய்வித்தார். [(ஐதரேய பிரமாணம் 8-4-21]). இதுவே அசுவமேதயாகத்தைப் பற்றிய மிகப் பழைய குறிப்பாகும். இவரது சூகதங்கள்சூக்தங்கள் மூலம் அக்காலத்தில் வேள்விகளும், பசு தானமும் அதிக அளவில் செய்யப்பட்டது என்றும் மக்கள் அதிகமான குதிரைகளையும், பசுக்களையும் விரும்பினர் என்றும், மன்னன் திவோதாசு அளித்த [[சோம பானம்|சோமபான]] அரங்கங்களில் தான் கலந்து கொண்டதாக பரத்துவாசர் ரிக்வேதம் 6-16-5 ல் குறிப்பிட்டுள்ளார். மன்னன் திவோதாசு 60,000 அசுரர்களை கொன்றதையும், ‘புரு’[[புரு, குலமன்னர்|மன்னர் மன்னன்புரு]] புருகுத்சன் அசுரர்களின் எழு கோட்டைகளை நாசமாக்கியதை ரிக்வேதம் 6-20-10 ல்10இல் குறிப்பிட்டுள்ளார்.