நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==வரலாறு==
இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் [[நல்லூர்|நல்லூரை]] இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய [[சிங்கை பரராசசேகரன்|சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி]]யினால் அமைக்கப்பட்டது. மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால் ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி மண்டபமும் விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளையும் செய்வித்தான். அது மட்டுமல்லாது இத்திருக்குளத்திறகு வடபகுதியில் நாயன்மார்கள் குருபூசை மடம் ஒன்றையும் அமைப்பித்தான். இதற்குச் சான்றுகள் குளத்திற்கு வடபால் உள்ள காணிகளின் பெயர்களே. அத்தோடு இக்குளத்திற்கு வடபால் உள்ள பிரதேசத்தில் சரஸ்வதி மகால் என்று அழைக்கப்பட்ட ஓர் நூலகமும் காணப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.இற்றைக்கு 76 ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்தால் குளத்தை ஆழமாக கிண்டுகின்றபோது ஓர் கல்வெட்டு சிலாசாசனம் கிடைக்கப்பெற்றது.அதில்
“கலி 3625 ல் சிங்கையாாியனல் பொருமானுக்கு தீர்த்தம் கொடுக்க இத்திருக்குளம் வெட்டப்பட்டது”
<ref>கலி 3625 ல் சிங்கையாாியனல் பொருமானுக்கு தீர்த்தம் கொடுக்க இத்திருக்குளம் வெட்டப்பட்டது</ref>
என்று பொறிக்கப்பட்டுள்ளது.