காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சி image added
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = காரைக்கால் அம்மையார்
| படிமம் = KaaraikaalAncient ammaiyaarHoly mother of KARAIKKAAL AMMAIYAR.jpgJPG
| படிமத் தலைப்பு = காரைக்கால் அம்மையார்
| படிம_அளவு =
வரிசை 8:
| பூசை_நாள் = பங்குனி சுவாதி
| அவதாரத்_தலம் = காரைக்கால்
| முக்தித்_தலம் = திருவாலங்காடு
| சிறப்பு =
}}
 
'''காரைக்கால் அம்மையார்''' மூன்று பெண் [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவரும், மூத்தவருமாவார். <ref name=hindu /> [[கைலாயம்|கையிலை]] மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, [[சிவபெருமான்]] ''அம்மையே'' என்று அழைத்ததாலும், [[காரைக்கால்]] மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். <ref name=hindu /> [[பரமதத்தன்]] என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய [[மாம்பழம்|மாம்பழத்தினை]] சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து [[சிவன்|இறைவனை]] சரணடைந்தார். <ref name=hindu />
 
இவர் [[இசைத் தமிழ்|இசைத்தமிழால்]] இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு [[அந்தாதி]] எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். <ref>இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூல்தான் அந்தாதி நூல்களுக்கெல்லாம் முதல் அந்தாதி நூலாகத் திகழ்கிறது.- நம்மைப் பேணும் அம்மை காண்! - இடைமருதூர் கி. மஞ்சுளாவின் கட்டுரை - தினமணி நாளிதழ் மார்ச் 14, 2014 </ref> [[அற்புதத் திருவந்தாதி]], [[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்]], [[திரு இரட்டை மணிமாலை]] போன்ற நூல்களைத் தந்து [[சைவத் தமிழ்|சைவத்தமிழுக்கு]] பெரும் தொண்டாற்றியுள்ளார். <ref name=hindu>இறவாமை வேண்டிய காரைக்கால் அம்மையார் - காத்த துரைசாமி - தி இந்து ஜூலை 10, 2014</ref> இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் இயற்றப்பட்டன.
 
இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் ''காரைக்கால் அம்மையார் கோவில்'' என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
 
== தொன்மம் ==
சைவ சமயத்தில் காரைக்கால் அம்மையாராகப் பிறந்தவர் தும்புருவின் மகள் சுமதி என்கின்றனர்.<ref name=dinamalartempl /> தும்புரு என்பவர் வீணை இசைப்பதில் வல்லவராக இருந்தார்.<ref name=dinamalartempl /> அவரது மகளான சுமதி சிவபெருமானை வேண்டி தவத்தில் இருந்தார். அப்போது துர்வாச முனி வந்ததை அப்பெண் கவனிக்கவில்லை.<ref name=dinamalartempl /> சுமதி தன்னை மதிக்காமல் இருக்கிறாள் என துர்வாசர் கோபம் கொண்டு பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார். சுமதி காரைக்காலில் புனிதவதி என்ற பெயரில் பிறந்தார். <ref name=dinamalartempl />
 
== வாழ்க்கை வரலாறு ==
 
=== இளமைக் காலம் ===
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu /> சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
 
=== இல்லறம் ===
புனிதவதியின் பெற்றோர் திருமணப்பருவம் வந்ததும் தகுந்த வரன் தேடினர்.<ref name=hindu /> நட்பு முறையிலான உறவினராகிய [[காரைக்கால்]] மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் காசுக்கடை(நகைக்கடை) வைத்திருந்த பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். <ref name=hindu />
 
=== மாங்கனியில் திருவிளையாடல் ===
ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமர செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு பல வகை பத்தார்தங்கலுடன் அன்னம் பரிமாறிய அம்மையார்,சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.
 
மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். "மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே" அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவனுக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தான். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றான்.
 
=== பேய் வடிவு பெறுதல் ===
பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.<ref name=hindu />
 
=== கயிலாயம் செல்லல் ===
அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். <ref name=hindu /> கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க "நம்மைப் பேணும் அம்மை காண்" எனக் கூறி "அம்மையே வருக"<ref name=hindu /> என்றழைத்து "வேண்டுவன கேள்" என விளித்தார், அதற்கு அம்மையார் "பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்றார்.அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.
[[படிமம்:Ancient Holy mother of KARAIKKAAL AMMAIYAR.JPG|thumb|வலது|200px|காரைக்கால் அம்மையார் பேயுருவச் சிலை]]
அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். <ref name=hindu/> கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க "நம்மைப் பேணும் அம்மை காண்" எனக் கூறி "அம்மையே வருக"<ref name=hindu/> என்றழைத்து "வேண்டுவன கேள்" என விளித்தார், அதற்கு அம்மையார் "பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்றார்.அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.
 
== எழுதியுள்ள நூல்கள் ==
 
காரைக்கால் அம்மையார் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். பதினொராம் திருமுறையுள் நான்கு பனுவல்கள் உள்ளன.
 
* [[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்|திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1]] - 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
* [[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்|திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2]] - 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
* [[திருவிரட்டை மணிமாலை]] - 20 பாடல்கள்
* [[அற்புதத் திருவந்தாதி]] - 101 பாடல்கள்
 
தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.
 
=== திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ===
காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும். <ref name=tamilvu1>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412113.htm|title=elekkiya varalarue|publisher=}}</ref>அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. <ref name=tamilvu1 />
 
=== அற்புதத் திருவந்தாதி ===
அற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் [[பதினோராம் திருமுறை]]த் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.<ref name=tamilvu>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/p103/p1034/html/p1034511.htm|title=Tamil Virtual University|publisher=}}</ref> இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. <ref name=tamilvu />
 
=== திருவிரட்டைமணிமாலை ===
திருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும்.<ref name=tamilvu2 /> இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார். <ref name=tamilvu2>{{cite web|url=http://www.tamilvu.org/slet/l4330/l41C3uri.jsp?pglink=1112&pageno=880|title=:: TVU ::|publisher=}}</ref> இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.<ref name=tamilvu2 />
 
== காரைக்கால் அம்மையார் கோயில் ==
[[Fileபடிமம்:காரைக்கால் அம்மையார் திருக்கோயில்.JPG|thumb|காரைக்கால் அம்மையார் திருக்கோயில்]]
 
[[புதுச்சேரி]] மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை [[காரைக்கால் அம்மையார் கோயில்]] என அழைக்கின்றனர். <ref name=dinamalartempl>{{cite web|url=http://temple.dinamalar.com/New.php?id=138|title=Karaikal Ammayar Temple : Karaikal Ammayar Karaikal Ammayar Temple Details - Karaikal Ammayar- Karaikal - Tamilnadu Temple - காரைக்காலம்மையார்|publisher=}}</ref> அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.<ref name=dinamalartempl />
 
== மாங்கனித் திருவிழா ==
காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க [[காரைக்கால் சோமநாதர் கோயில்]] சார்பாக [[மாங்கனித் திருவிழா]] நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் [[ஆனி மாதம்]], [[பௌர்ணமி]] அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது [[மாங்கனி]]களை வாரி இறைத்து [[நேர்த்திக்கடன்]] செலுத்துவார்கள்.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=11896|title=காரைக்காலில் மாங்கனி திருவிழா சுவாமி வீதியுலாவில் கோலாகலம்!|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.dinamani.com/tamilnadu/article764221.ece|title=காரைக்காலில் மாங்கனி திருவிழா தொடக்கம்|publisher=}}</ref>
 
== சிறப்புகள் ==
* சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்டவர். <ref name=dinamanisi>{{cite web|url=http://www.dinamani.com/specials/kalvimani/2013/11/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/article1885170.ece?service=print|title=அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-3|publisher=}}</ref>
* தனிக்கோயில் காரைக்காலில் உள்ளது.
* இறைவனின் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.
* அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தினை கொண்டவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர்.
* அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர். <ref name=dinamanisi />
* திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார். <ref name=dinamanisi />
* அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது. <ref name=dinamanisi />
 
== படத்தொகுப்பு ==
<gallery>
அடியாருக்கு மாங்கனி படைக்கும் புனிதவதி.jpg|சைவ அடியாருக்கு மாங்கனி படைக்கும் புனிதவதி
வரி 86 ⟶ 85:
</gallery>
 
== ஆதாரங்கள் ==
<references />
 
== வெளி இணைப்பு ==
*[http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16 காரைக்காலம்மையார் வரலாறு]
*[http://temple.dinamalar.com/New.aspx?id=138 காரைக்கால் கோவில்]
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது