மைசூர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 38:
 
'''மைசூர் அரசு''' (''Kingdom of Mysore'', [[கன்னடம்]]: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) [[தென்னிந்தியா]]வில் [[1399]] இல் [[மைசூர்]] மாநகரில் [[யதுராய உடையார்]] என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும். இது ஆரம்பத்தில் உடையார் குடும்பத்தினரால் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழ் சிற்றரசாக [[1565]] வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. [[முதலாம் நரசராச உடையார்|நரசராச உடையார்]] மற்றும் [[சிக்க தேவராச உடையார்]] ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு [[கர்நாடகா]] மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
 
மைசூர் அரசைக் கைப்பற்றிய [[ஹைதர் அலி]]யும், அவரது மகன் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானும்]] மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர்.
 
ஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை 1799 முதல் 1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர்.
 
1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு [[பிரித்தானிய இந்தியா]]விற்கு கப்பம் கட்டும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களில்]] ஒன்றாக விளங்கியது.
 
[[இந்தியப் பிரிவினை]]க்குப் பின்னர் மைசூர் அரசு [[இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு|அரசியல் ஒருங்கிணைப்புத்]] திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசில்]] இணைக்கப்பட்டது.
 
{{குறுங்கட்டுரை}}
வரி 44 ⟶ 52:
[[பகுப்பு:மைசூர் பேரரசு]]
[[பகுப்பு:கர்நாடக வரலாறு]]
[[பகுப்பு:இந்தியாவின் மன்னராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது