தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
17 செப்டம்பர் 2016 அன்று கோயிலுக்கு சென்றபோது விவரங்கள் பெறல்
வரிசை 5:
 
==வரலாறு==
முதல் நாயக்க மன்னராகிய [[சேவப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] காலத்தில் தஞ்சைக்கு வந்த [[கோவிந்த தீட்சிதர்]] முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரைப்]] போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். <ref name="kudavayil"/> இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.
 
==தேவஸ்தான கோயில்==
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். <ref> தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, பூலோககிருஷ்ணன் கோயில், ப.230-235, வ.எண்.155 </ref>
 
==இறைவன்==
கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். [[கும்பகோணம்]] வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. <ref name="kudavayil"/> இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார்.
 
==கும்பகோணம் வீரபத்திரர் கோயில்==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது