'''ஆந்திர இசுவாகுகள்''' ([[சமசுகிருதம்|சமசுகிரதம்]] इक्ष्वाकु, [[தெலுங்கு]] ఇక్ష్వాకులు) என்பவர்கள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] பழமையான அரச மரபுகளில் ஒன்றாகும். இவர்கள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலுங்கானா|தெலங்கானாவின்]] குண்டூர் -கிருஷ்ணா-நலகொண்டா வட்டாரத்தில் ஆட்சி செலுத்தியவர்கள். இவர்கள் தெலுங்குப் பகுதிகளை [[கோதாவரி]] மற்றும் [[கிருஷ்ணா ஆறு]] ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளை கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆண்டனர்.<ref>[http://www.hindu.com/2006/12/02/stories/2006120201320200.htm Andhra Ikshvaku inscriptions]</ref> இவர்களின் தலைநகராக விஜயபுரி (நாகோர்ஜுன கொண்டா) இருந்தது. இந்த இச்சுவாகு மரபினர் புராண கால இச்சுவாகுவினருடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர், இந்த ஆந்திர உள்ளூர் இச்சுவாகுவினர் அந்த புராண இச்சசுவாகு மரபினரின் பெயரை பட்டமாக ஏற்றிருக்கக்கூடும்.<ref>Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, [[தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு|National Council of Educational Research and Training]], India , pp 212</ref>
தொல்லியல் சான்றுகளின்படி ஆந்திர இச்சுவாகு மரபினர் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்று]] வடிநிலப்பகுதியில் [[சாதவாகனர்|சாதவாகனர்களை]] வெற்றி கொண்டதாக அறியப்படுகிறது. இச்சுவாகு மரபினரின் கல்வெட்டுகள் நாகார்ஜுண கொண்டா, [[ஜக்கய்யபேட்டை|ஜக்கையாபேட்டை]], [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]] , பாத்திபிரோளு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன