'''ஹென்றிகேஎன்றிக்கே ஹென்றிகஸ்என்றீக்கசு''' (''Henrique Henriques'', ஹென்றிக்கே ஹென்றீக்கஸ் அல்லது அன்றீக்கே அன்றீக்கசு<ref>{{cite book|last=[[கமில் சுவெலபில்]]|title=Companion studies to the history of Tamil literature |year=1992|publisher=BRILL|isbn=9789004093652|pages=151|url=http://books.google.com/books?id=qAPtq49DZfoC&pg=PA151}}</ref> [[1520]]–[[1600]]), [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[இயேசு சபை]] போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். அண்டிரிக் அடிகளார் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். [[ஐரோப்பா]]வில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. முதன்முதலில் தமிழில் அச்சு நூல்களை வெளியிட்டார். 1546 ஆம் ஆண்டில் [[இந்தியா]]வுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை [[கோவா]]வில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித [[பிரான்சிஸ் சவேரியார்|ஃபிரான்சிஸ்பிரான்சிசு சேவியரின்]] (1506-1552) அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.
==பிறப்பு==
ஹென்றிகேஎன்றிக்கே அடிகள் [[போர்ச்சுக்கல்]] நாட்டில் உள்ள விலாவிக்கோசா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய மூதாதையர் [[யூதம்|யூத]] மதத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் 1545 ஆம் ஆண்டில் [[கிறித்தவம்|கிறித்தவ]] மதத்தில் சேர்ந்தார். சமயப் பணி செய்ய [[இந்தியா]]வுக்கு 1546இல் வந்தார்.
தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "[[தம்பிரான் வணக்கம்]]" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் [[கொல்லம்]] என்றும், பதித்த நாள் அக்டோபர் 20, 1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய [[மொழி|மொழியில்]] எழுதப்பட்ட கிறித்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். [[கோன்சால்வசு|கோன்சால்வஸ்]] என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன<ref>http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1.</ref> பாதிரி ஹென்றிகேஎன்றீக்கே ஹென்றிகஸ்என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசியபோர்த்துகீசு நாட்டில் [[லிஸ்பன்|லிஸ்பனில்லிசிபனில்]] வெளியிட்டார்).
==பிற பணிகள்==
சமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு மட்டுமல்லாது குமுகாயத் தொண்டும் ஹென்றிகேஅண்டிரிக் அடிகளார் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு மருத்துவமனையை முத்துக்குளித்துறையில் தொடங்கினார். 1567 இல் புன்னைக் காயலில் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி அதில் இயக்குநராகவும் ஆசிரியராகவும் இருந்தார். எல்லா மதத்தினரும் ஹென்றிகேஅண்டிரிக் அடிகளாரை நேசித்தனர்.