டி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 1:
[[File:DBalasubramaniam.jpg|thumb|right|1940களில் டி. பாலசுப்பிரமணியம்]]
'''டி. பாலசுப்பிரமணியம்''' (''T. Balasubramaniam'') தமிழ்த் திரைப்பட நடிகராவார். ஒரு எழுத்தாளராகவும் தமிழ்த் திரையுலகில் பங்களித்தார். [[பொன்னி (1953 திரைப்படம்)|பொன்னி]] திரைப்படத்தின் வசனம் எழுதுவதில் இவரின் பங்கும் இருந்தது. இந்தத் திரைப்படத்திற்காக சில பாடல்களையும் எழுதியிருந்தார்.<ref name="THRGP">{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/ponni-1953/article5433529.ece | title= Ponni (1953) |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=7 டிசம்பர் 2013 | accessdate=30 செப்டம்பர் 2013}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 7:
==நாடகங்களில் நடிப்பு==
இந்நிலையில், ஜகன்னாதய்யரின் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையார் சென்னையில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அவர்களின் நாடகம் ஒன்றை தாயாருடன் சென்று பார்த்தார். அக்கம்பனியில் சேர்ந்து நாடகம் நடிக்கும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. தாயாரின் அனுமதியுடன் கம்பனியில் சேர்ந்தார். அக்கம்பனியில் அப்போது [[கே. சாரங்கபாணி]], பி. டி. சம்பந்தம் போன்ற பலர் நடித்து வந்தனர். ஐந்தாண்டுகள் அக்கம்பனியில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். ஜகன்னாதய்யருடன் ஏற்பட்ட சிறு தகராறில் சில நடிகர்கள் அங்கிருந்து விலக நேரிட்டது. அதில் பாலசுப்பிரமணியமும் ஒருவர்.<ref name="PP0449"/>
 
பின்னர் சென்னையில் வி. எஸ். சுந்தரேச ஐயர் எஸ்பிளனேட் அரங்கில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்த போது, நண்பர் ஒருவரின் உதவியால் அந்தக் கம்பனியில் உபநடிகனாகச் சேர்ந்தார். அதன் பிறகு ராவண கோவிந்தசாமி நாயுடு, மனமோகன அரங்கசாமி நாயுடு ஆகியோரின் நாடகக் கம்பனிகளில் பணியாற்றினார். 1929 முதல் 1931 வரை டி. பி. பொன்னுசாமிப் பிள்ளனென்பவரின் நாடகக் கம்பனியில் பணியாற்றினார். அக்கம்பனியில் அப்போது [[கே. ஆர். ராமசாமி]], [[டி. ஆர். மகாலிங்கம்]] ஆகியோரும் நடித்து வந்தனர். இவர்களுடன் நடித்த ''பம்பாய் மெயில்'' நாடகம் அப்போது பிரமலமானது. 'இக்கம்பனியில் நடித்துக் கொண்டிருந்த போது 30வது அகவையில் திருமணம் நடந்தது.<ref name="PP0449"/> பாலசுப்பிரமணியம் சேலத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன் பின்னர் திரைப்பட நடிகையான சரசுவதியை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பசுபதி என்ற மகன் உள்ளார்.<ref name="PP0449"/>
 
==திரைப்படங்களில் நடிப்பு==
டி. பாலசுப்பிரமணியம் [[பூலோக ரம்பா]] மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் [[குபேர குசேலா]], [[கங்காவதார்]] போன்ற திரைப்படங்களில் தோன்றினார்.<ref name="PP0449"/>
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது