தமிழத்தமிழை தாய்மொழியாகக் கொண்ட டி. பாலசுப்பிரமணியம் இராயபுரம் ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். குடும்ப வறுமை காரணமாக தகப்பனார் அவரது சகோதரர் வசிக்கும் ஜனாவரத்தில் சென்று வசித்து வந்தார். தாயாரும், பாட்டியாரும் முதலில் ஜார்ஜ் டவுனிலும், பின்னர் இராயபுரத்திலும் வசித்து வந்தனர். இங்கு தெலுங்கு பேசும் குடும்பங்கள் இருந்ததால், தெலுங்கை ஓரளவு பேசக் கற்றுக் கொண்டார். பாலசுப்பிரமணியத்திற்கு ஒன்பதரை வயதாகும் போதே தந்தை காலமானார். இதனால் பாலசுப்பிரமணியம் மீது குடும்ப சுமை வீழ்ந்தது. சிறு தொழில் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தோல்கிடங்கு, பூட்டுப்பட்டரை, மளிகைக் கடை, என சில இடங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் மாதம் ஏழு ரூபாய் சம்பளத்தில் வேலையில் அமர்ந்தார். சில காலத்தில் அங்கிருந்து விலக்கப்பட்டார். தந்தை பூசை செய்து வந்த பிள்ளையார் கோவிலில் பூசை செய்யும் பணி கிடைத்தது.<ref name="PP0449">{{cite journal | title=குணசித்திர நடிகர் டி. பாலசுப்பிரமணியம் | author=ராஜாராம், எம். | journal=பேசும் படம் | year=1949 | month=ஏப்ரல் | pages=பக். 18-33}}</ref>