ஆத்ம ஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 7:
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த [[குரு]]வின் வழியாக கேட்பது [[சிரவணம்]], கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் [[மனனம் (இந்து சமயம்)|மனனம்]], (கேட்டதை மனதில் அசைபோடுதல்), ([[நிதித்யாசனம்]]), வேதம், குரு, சாத்திரங்கள், யுக்தி, அனுபவம் முதலிய சாதனங்கள் வழியாக மட்டுமே ஆத்ம ஞானம் எனும் [[பிரம்மம்|பிரம்ம ஞானத்தை]] அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மாவை விசாரனை செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமயமான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
இது போன்ற அனாத்மா ([[ஆத்மா|ஆத்மாவின் எதிர்மறை பொருள்]]) பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் [[ஆத்மா]] அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், நீர், காற்று, நெருப்பு, சப்தம், சுவை, தொடு உணர்வு, முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் (இயற்கை) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, [[ஆத்மா]] ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை)
==உசாத் துணை==
*
* [http://bhagavatgita.blogspot.in/2013/05/33.html ஆத்ம ஞானம்]
* [http://www.kamakoti.org/tamil/2dk10.htm ஆத்ம ஞானம்]
|