வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merge |
|||
வரிசை 1:
'''வர்ணாசிரமம்''' என்பதன் பொருள், [[வர்ணங்கள்|வர்ணம்]] என்பதற்கு சமுதாய மக்கள் செய்யும் தொழிலையும், ஆசிரமம் என்பதற்கு வாழும் வாழ்வியல் முறையை விளக்குவதே ஆகும். [[பிரம்மா|விராட் புருசனின்]] முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்து முறையே [[அந்தணர்|வேதியர்]], [[சத்திரியர்]], [[வைசியர்|வணிகர்]] மற்றும் [[சூத்திரர்]] எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர்.
விராட் புருசனின் இடுப்புக்குக் கீழுள்ள முன்புறப் பகுதியிலிருந்து [[கிரகஸ்தம்|கிரகஸ்த ஆசிரமமும்]] (இல்லறம்), இருதயத்திலிருந்து [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சரியம்]] (மாணவப் பருவம்) ஆசிரமமும், மார்பிலிருந்து [[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்த ஆசிரமமும்]] (காடுறைந்து வாழும் முறை), தலையிலிருந்து [[சந்நியாசம்|சந்நியாச ஆசிரமமும்]] (துறவறம்) தோன்றின.
==நால்வகை வர்ண தர்மங்கள்==
===வேதியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்===
[[அந்தணர்|வேதியர்]] இயல்புகள்:- புலனடக்கம், மன அடக்கம், விவேகம், வைராக்கியம், தவம், பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, தானம் பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள்.
வேதியர் கடமைகள் :- வேள்வி செய்தல்-செய்வித்தல், வேதம் ஓதுதல்-ஓதுவித்தல், தானம் பெறுதல். தவம் இயற்றுதல், மக்களுக்கும், நாட்டை ஆளும் அரசனுக்கும் தர்ம-கர்ம-மோட்ச விசயங்களில் அறிவுரை கூறுதல். வேதியர்கள், மீள முடியாத துன்ப காலங்கள் நீங்கும் வரை, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பட்டு நூல் கொண்டு நெசவுத்தொழில் செய்தல் மற்றும் [[சத்திரியர்]] மற்றும் [[வைசியர்|வைசியர்களின்]] (வணிகம் செய்தல்) தொழிலை மேற்கொள்ளலாம். பகை நாட்டவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, உயிருக்கு ஆபத்தான காலங்களில் வாள் ஏந்தி சத்திரியர் தர்மத்தை பின்பற்றி உயிர் வாழலாம். ஆனால் எத்தகைய துயரக் காலத்திலும் பிறரிடம் கைகட்டி பணி செய்து வாழக் கூடாது.
===சத்திரியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்===
[[சத்திரியர்]] இயல்புகள் :- ஒளி மிக்க முகம், உடல் வலிமை, வீரம், துயரங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை, கொடைத்திறன், விடாமுயற்சி, தளராத மன உறுதி, மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமைத் திறன்.
சத்திரியர் கடமைகள் :- மக்களை துயரங்களிலிருந்து காக்க வேண்டும். சத்திரியன் தனது தர்மங்களை கடைப் பிடிக்க முடியாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, பஞ்சுநூல் கொண்டு நெசவுத்தொழில் மேற்கொள்தல், [[வைசியர்|வைசிய தர்மத்தை]] கைக்கொண்டு வாணிபம் செய்யலாம். மேலும் வேட்டையாடி உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் பிறரிடம் கைக்கட்டி வேலை செய்து பிழைக்கக் கூடாது.
===வைசியர் வர்ண இயல்புகள் மற்றும் கடமைகள்===
[[வைசியர்|வைசியர்]] வர்ண இயல்புகள் :-வாணிபம் செய்தல், பயிரிடுதல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடையாதிருப்பது.
வைசிய வர்ண கடமைகள் :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் [[வேளாளர்|வேளாளர்களின்]] கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.
===சூத்திரர் வர்ண இயல்புகளும் கடமைகளும்===
[[சூத்திரர்]]கள் முதல் மூன்று [[வர்ணங்கள்|வர்ணத்தவர்களுக்கும்]], பசு மற்றும் தேவர்களுக்கு வஞ்சனையின்றி பணி செய்வதின் மூலம் கிடைக்கும் பொருளில் மன நிறைவடைதல்.
===அனைத்து வர்ணத்தினருக்கான பொதுவான இயல்புகளும் கடமைகளும்===
மனம்-மொழி-மெய்களால் பிறர்க்குத் தீங்கு செய்யாமை, [[வாய்மை]]யில் உறுதியுடன் நிற்பது, திருடாமை, விருப்பு-வெறுப்பு, பேராசை, பழி தீர்க்கும் உணர்வு, கருமித்தனம் இன்றி வாழ்தல்.
==நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும்==
===பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம கடமைகள்===
[[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரி]] குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், [[குருகுலம்|குருகுலத்தில்]] குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் [[குரு]] என்பவர் அனைத்து தெய்வத்தன்மை வாய்ந்தவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுல கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு [[கிரகஸ்தம்|கிரகஸ்த ஆசிரமத்திற்கு]] (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.
===இல்லற தர்ம கடமைகள்===
[[கிரகஸ்தம்|இல்லற]] வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் [[யக்ஞம்|பஞ்ச மகாயக்ஞங்கள்]] செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. [[யக்ஞம்]] ஐந்து வகைப்படும்.
1. தேவ யக்ஞம்:- வேத மந்திரங்களினால் [[வேள்வி]]கள் வளர்த்து தேவர்களுக்கு ஹவிஸ் அளித்து மகிழ்விப்பது.
2. ரிஷி யக்ஞம்:- [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]], இதிகாசங்கள், திருமுறைகள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.
3. பித்ரு யக்ஞம்:- . நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.
4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.
5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.
இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் [[பக்தி யோகம்|பக்தி]] செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வானப்பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
===[[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்தர்களின்]] (காடுறை வாழ்வு) கடமைகள் ===
[[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்தனின்]] முதன்மையான தர்மம் தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்புறமும் நெருப்பு மூட்டிக் கொண்டு, கண்களால் சூரியனை நோக்கிக் கொண்டும், மழைக்காலத்தில் வெட்டவெளியில் நின்றும், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். மிருகங்களை கொன்று உண்ணக் கூடாது. காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்தக் காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், [[சாதுர்மாஸ்ய விரதம்]] போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு [[தவம்]] செய்வதால் அதன் பலனாக, அந்த வனப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை வந்தடைவான்.
===சந்நியாச தர்ம(துறவறம்) கடமைகள்===
{{main|சந்நியாசம்}}
கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து [[சந்நியாசம்|சந்நியாச]] தர்மத்தை ஏற்க வேண்டும். [[துறவி]] கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம்.
==உசாத்துணை==
* [http://sanskritdocuments.org/all_pdf/manusmriti.pdf
[[பகுப்பு:
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயத்தில் சாதிகள்]]
|