நீலகண்ட தாரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துவக்கம்
 
சி துவக்கம்
வரிசை 1:
'''நீலகண்ட தாரணி''' அல்லது '''மஹா கருணா தாரணி''' எனபது [[அவலோகிதேஷ்வரர்|அவலோகிதேஷ்வரருக்கு]] உரிய ஒரு [[மகாயானம்|மகாயான பௌத்த]] [[தாரணி]] ஆகும். இதை மாண்டரீன் சீன மொழியின் '''டாபேய் ஸோ'''('''Dàbēi Zhòu''') என அழைப்பர். ''மஹாகருணாசித்த சூத்திரத்தின்'' படி இந்த தாரணியை அவலோகிதேஷ்வரர் [[புத்தர்]]கள், [[போதிசத்துவர்]]கள், [[தேவர்கள் (பௌத்தம்)|தேவர்கள்]] ஆகியோர் அடங்கிய சபையின் முன் கூறப்பட்டதாகும். இது [[ஓம் மணி பத்மே ஹூம்]] என்ற ஆறெழுத்து மந்திரத்தைப் போல கிழக்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற தாரணி ஆகும். இந்த தாரணி பாதுகாப்புக்க்காகவும், தூய்மைபடுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
 
==தோற்றம்==
 
இந்த நீலகண்ட தாரணி கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையின் மூவரால் சீனத்துக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டது. முதலில் சீ-டுங்'ம்[[627]]-[[649]] அடுத்து பாகவததர்மரும் [[650]]-[[660]] , இதற்கடுத்து போதிருசியும் [[709]] இதனை சீனத்துக்கு மொழிப்பெயர்த்தனர். பின்னர் வஜ்ரபோதியும்(719-741), இருமுறை அவரது சீடர் அமோவஜ்ரரும்(723-774) மொழிப்பெயர்த்தனர். 15ஆம் நூற்றாண்டில் தியானபத்திரரும் ஒரு முறை இதை மொழிப்பெயர்த்துள்ளார்.
 
இத்தனை பதிப்புகள் இருந்தாலும், அமோகவஜ்ரரின் பதிப்பே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. சீ-டுங்'இன் பதிப்பு ஆதி மூல வடிவாக இருந்தாலும் அது மிகவும் நீளமாகவும் உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த காரணத்தினால் அமோகவஜ்ரரரின் பதிப்பு பெருவாரியான பயன்பாட்டில் உள்ளது.
 
 
{{விக்கிமூலம்|மஹா கருணா தாரணி}}
"https://ta.wikipedia.org/wiki/நீலகண்ட_தாரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது