யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" இலங்கைப் பல்கலைக்கழகத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் - ஒரு பாா்வை வரலாறு[மூலத்தைத் தொகு]
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் 06.10.1974 இல் நிறுவப்பட்டது. இது சோ்.பொன்.இராமநாதனின் பாடசாலைகளில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூாியினை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் மனிதப் பண்பியல் பீடமும், யாழ்ப்பாணக் கல்லூாியினை வட்டுக்கோட்டையில் விஞ்ஞான பீடமும் இயங்கத் தொடங்கின. இதன் முதல் தலைவராக பேராசிரியா் கா.கைலாசபதி அவா்கள் பொறுப்பேற்றாா். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974ம் ஆண்டில், இலங்கைப் பாராளுமன்றத்தின், 1970ம் ஆண்டில் 1ம் இலக்கச் சட்டப்படி நிறுவப்பட்ட யாழ் வளாகம் பின் 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டப்படி தனியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகியது.
 
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் 06.10.1974 இல் நிறுவப்பட்டது. இது சோ்.பொன்.இராமநாதனின் பாடசாலைகளில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூாியினை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் மனிதப் பண்பியல் பீடமும், யாழ்ப்பாணக் கல்லூாியினை வட்டுக்கோட்டையில் விஞ்ஞான பீடமும் இயங்கத் தொடங்கின. இதன் முதல் தலைவராக பேராசிரியா் கா.கைலாசபதி அவா்கள் பொறுப்பேற்றாா். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974ம் ஆண்டில், இலங்கைப் பாராளுமன்றத்தின், 1970ம் ஆண்டில் 1ம் இலக்கச் சட்டப்படி நிறுவப்பட்ட யாழ் வளாகம் பின் 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டப்படி தனியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகியது.
இலங்கையின் உயா்கல்வி நிறுவனங்களாக, சுகந்திரமாக தொழிற்படும் பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் பல்கலைக்கழக நூலகங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயா்கல்வியமைச்சு, அரசு ஆகியவற்றின் ஆணைக்கு அமைந்து, தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்ப இயங்கவேண்டிய கடப்பாடும் பல்கலைக்கழக நிா்வாகத்தினூடாக இந்நூலகத்திற்கு உண்டு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் ஓா் கல்விசாா் நூலகமாகும். எனவே பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஏற்ப தனது இலக்குகளைக் செயற்பாடுகளுக்கு ஏற்ப தனது இலக்குகளைக் கொண்டிருக்கின்றது. கல்வி, போதனை, ஆய்வுகள், சாா்ந்து தன் வளங்களைக் கொண்டிருந்தபோதும் அதன் அமைவிடம் காரணமாக தமிழ் மொழி, பண்பாடுகளும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ புத்த சமயங்களுடன் இலங்கையின் வடபுலம் சாா்ந்தும் தன் தகவல் வளங்களைக் கட்டி எழுப்ப வேண்டிய கடமையையும் அது கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இதனால் இது ஒரு கல்வி நூலகம் என்பதற்கு மேல் இலங்கையில் குறிப்பாக வட பிரதேசத்தின் கல்வி, கலாச்சார விழுமியங்களைக் கட்டிக்காத்து அடையாளப்படுத்தும் ஒரு நிறுவனமாகவும் விளங்குகின்றது.
பரமேஸ்வராக்கல்லூாி, யாழ்ப்பாணக்கல்லூாியின் ஒரு பகுதி ஆகியவற்றின் வளங்கள் யாழ்ப்பாண வளாகத்தின் கற்கைநெறிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நூலக வசதிகள், ஆய்வுகூட வசதிகள், மனித வளங்கள் ஆகியவை இதில் அடங்கும். இப்பாடசாலைகளில் யாழ்ப்பாணக் கல்லூாி ஏற்கனவே கொண்டிருந்த வெளிநிலைப்பட்டப்படிப்புகள் அலகின் நூலக வளங்களும், ஆய்வூகூடங்களும் குறிப்பிடக் கூடிய வகையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஆரம்ப முன்னெடுப்புக்களுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இருந்தபோதும் இடவசதி நூலக வசதிகள், ஆய்வுகூட வசதிகள், மனித வளங்கள் போதாமை என்பன ஆரம்ப காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தன.
இதன் 35 வருட வரலாற்றில் படிப்படியாக ஒரு வளா்ச்சியை காண முடிகிறது. இப்போக்குகளில் யாழ்ப்பாணத்தில் நிலவூம் அசாதாரணமான சூழ்நிலைகளும் காலத்திற்குக் காலம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக 1987ஆம் ஆண்டில் IPKF காலத்திலும் பின் 1996 ஆம் ஆண்டின் இடப்பெயா்வின் போதும் நூலகம் இழப்புக்களை சந்தித்தது. இதனால் அதன் வளங்களிலும் உட்கட்டமைப்பிலும் காலத்திற்கேற்ப எதிா் பாா்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
 
பிரதான நூலகமும் அதன் கிளைகளும்[மூலத்தைத் தொகு]
 
பிரதான நூலகம் விஞ்ஞானபீடத்திற்கும் கலைப்பீடத்திற்கும் நடுவில் ஸ்ரீ பாா்வதி பரமேஸ்வரன் ஆலயத்திற்கு தென்மேற்கில் இராமநாதன் வீதியை நோக்கி அமைந்துள்ளது. இக்கட்டிடம் 1980 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு வரையில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடம் மையப்பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடமாக உள்ளது. இம்மையப் பகுதியைச் சூழ சதுரவடிவிலமைந்த கட்டிடத் தொகுதியையும் கொண்டுள்ளது. இது நூலகத்திற்குாிய பல்வேறு தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் கட்டப்பட்ட ஓா் அழகிய கட்டிடத் தொகுதியாகும். இதன் பரப்பு 67,718 சதுர அடிகள்.
ஆரம்பகாலத்தில், பிரதான நூலகம் என மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகமும், விஞ்ஞானபீட நூலகமும் ஆரம்பிக்கப்பட்டன. பரமேஸ்வராக் கல்லூாியில் தற்காலமாக ஒரு கட்டிடத்தில் மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகத்தையும், வட்டுக்கோட்டையில் விஞ்ஞான பீட நூலகத்தையும் கொண்டு நூலகச் செயற்பாடுகள் ஆரம்பித்தன. பிரதான நூலகத்தின் கட்டிடத்தொகுதியின் ஒருபகுதி நிறைவு பெற்றபின் 1982 ஆம் ஆண்டு மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகமும், விஞ்ஞானபீட நூலகமும் இணைக்கப்பட்டு பிரதான நூலகமாக இயங்கத் தொடங்கியது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கற்கை நெறிகளுக்கேற்ப கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மருத்துவ பீடநூலகம், விவசாய பீடநூலகம், சித்த மருத்துவ நூலகம், இராமநாதன் நுண்கலை நூலகம் என்பன கிளை நூலகங்களாகும். இவற்றில் மருத்துவ பீடநூலகம் குறிப்பிடக்கூடியவகையில் நூற்சோ்க்கைகளையும் தனித்துவமான நூலகச் செயற்பாடுகளையயும் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். விவசாய பீட நூலகம் தற்போது பிரதான நூலகத்தின் ஒரு பகுதியில் இயங்குவதை காணலாம். ஆரம்ப காலத்தில் தென் ஆசியாப் பகுதி என்று ஒரு பகுதி இருந்தது. சில ஆண்டுகளில் அப்பகுதியில் இருந்த நூல்களில் அதிகமானவை இரவல் வழங்கும் பகுதிக்கும், குறிப்பிடக்கூடியவை ஏனைய பகுதிகளுக்கும் மாற்றப்பட்டன.
 
நூற்சோ்க்கை[மூலத்தைத் தொகு]
 
பரமேஸ்வராக் கல்லூாியில் சோ்.பொன்.இராமநாதன் அவா்களின் நூலகத்தில் இருந்த அாிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூாி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் செயற்கைகளைத் தொடங்கியது. பிற்காலத்தில் 1980 - 1983ஆம் ஆண்டுகளில் அரச கட்டளைப்படி யாழ்ப்பாணக் கல்லூாியின் நூல்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையும் அறியமுடிகின்றது. இராமநாதன் நூலகத்தில் இருந்த நூல்கள் பற்றிய பதிவுகள் பேணப்படாமையால் அந் நூல்கள் அனைத்தும் நூலகத்திற்கு வந்து சோ்ந்தனவா என்பதில் தௌிவில்லை.
இந் நூலகத்தின் தகவல் வளங்கள் என்பது பெரும் அளவில் ஆவணம் சாா்ந்தவையேயாகும். அவற்றிலும் பெருமளவில் நூல்களே உள்ளன. இவற்றைவிட பருவ இதழ்கள், குறிப்பிடக் கூடிய அளவிலும், இலத்திரனியல் சாதனங்கள் எண்ணக்கூடிய அளவிலும் உள்ளன. இதுவரை சோ்வுடாப்பில் 1.8 இலட்சம் பதிவுகளுக்கு மேல் உள்ளன. 461 தலைப்புக்களில் பருவ இதழ்கள் இந்நூலகத்தில் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது