உம்பளச்சேரி மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இந்தியாவில் தோன்றிய மாட்டு இனங்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
இது ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கு சொந்தமான மாட்டினம் இது தற்போதைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உம்பளச்சேரி என்னுமிடத்திலிருந்து எனும் கிராமத்தில் தோன்றியதால் இங்கு கிடைக்கும் உப்பல் அருகு எனும் புல்லினை மேய்ந்து வளர்ந்ததாலும் இப்பெயர் பெற்றது.. இதன் பிறப்பிடம் தொடக்கத்தில் இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதியே.இதன் மூதாதையர் இந்த டெல்டா மாவட்டங்களில் வலசை முறை மேய்ச்சலில் வளர்க்கப்படும் தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளே,இதன் தாய் இனமான தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளை போலவே அனைத்து குணங்களையும் பெற்றிருந்தாலும் இவற்றின் கொம்புகள் சரியான அமைப்பாக வளராது பெரும்பாலும் இம்மாட்டின் எருதுகளுக்கு கொம்புகளைத் தீய்த்து விடுகிறார்கள். காதுகளையும் குதிரைகளுக்கு இருபது போல அழகாக கத்தரித்து விடுவார் இது காது நாவெடை காது என்று அழைக்கப்படும்.வெள்ளை நிற நெற்றிப்பொட்டு ,வெண்மை நிற வால்குஞ்சம்,இடுப்பில் மறை (தட்டு மறை),திமில் மறை(கொண்டை மறை),பூட்சு மறை(நான்கு காலிலும் மறை),வெங்குளம்பு(வெள்ளை நிறகுளம்பு) இவற்றின் அங்க அடையாளம். இது மானவுணர்வும் சுறுசுறுப்பும் வாய்ந்த மாடு. இதைப் பழக்குவது எளிதன்று. கடிப்பதும் உதைப்பதும் இதன் இயற்கை.டெல்டா மாவட்டங்களின் கடுமையான உளை,சேறு நிறைந்த சேற்று வயல்களை உழுவதற்கு இந்த மாட்டு இனத்துடன் வேறு எந்த உள்நாட்டு மாடுகளும் போட்டி போடா முடியாது. அதிகச் சுறுசுறுப்புற்றதுமான மாடு. இதற்குத் தீனிச் செலவும் குறைவு.
பசுக்கள் மிகுந்த தாய்ப்பாச பிணைப்பு கொண்டது. கன்றுகளை விட்டு பிரியாமல் இருக்கும் பால்மடி சிறுத்து காணப்படும். மடிப்பகுதி அடிவயிற்றோடு ஒட்டி காணப்படும். பால்காம்புகள் மிகச்சிறியதாக நல்ல இடைவெளி விட்டு காணப்படும். இவ்வகை பசுக்கள் பால் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இவ்வகை பசுக்களின் பாலில் கொழுப்பு 4.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை உள்ளது. பாலில் கொழுப்பு இல்லாத திடப்பொருள் 8 சதவீதம் உள்ளது. கறவை பசு நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டர் பால் கொடுக்கும். கன்று ஈன்ற பின்பு 8 மாதங்கள் வரை பால் கறக்கும். இவ்வினமாடுகள் 44 மாதத்தில் பருவத்திற்கு வருகின்றன. சராசரியாக ஒரு பசு 10 கன்றுகள் வரை ஈனும்.காளைகளின் கொம்புகள் கூர்மையாகவும், கடினமாகவும் குட்டையாகவும் இருக்கும். கழுத்து மற்றும் காதுகள் சிறியதாக இருக்கும் 3 முதல் 4 வயது ஆனவுடன் பொலி காளைகளாக பயன்படுத்தப்படுகின்றன. .இவ்வின எருதுகள் வயல் உழவு, பாரவண்டி இழுத்தல், வைக்கோல் போரடித்தல் போன்ற பணிகளை திறம்பட செய்யும் திறன்கொண்டவை. கடுமையானவெயிலில் கூட தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் உழைக்கும் திறன்பெற்றவை. இரண்டு மாடுகள்பூட்டிய மாட்டு வண்டியில் ஏற்றப்பட்ட சுமார் 2000 முதல் 2500 கிலோ பாரத்தை 20 கி.மீ வரை சளைக்காமல் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவை. உம்பளாச்சேரி இன மாடுகள்,தஞ்சாவூர் மாடு,தெற்கத்தி மாடு,மோளை மாடு,மொட்டை மாடு,ஜாதி மாடு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உம்பளாச்சேரி இனமாடுகள் அவற்றை வகைபடுத்தி வளர்த்த பண்ணையாளர்களின் பெயரிலேயே இன்றளவும் அழைக்கபடுகிறது. இவற்றில் ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, சூரியங்காட்டு மாடு மற்றும் கணபதியான் மாடு ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்க உட்பிரிவுகளாகும்
பல தென்னிந்திய இனமாடுகள் நிறம் மாறும் இயல்புடையவை.அதிலும் குறிப்பாக நம் உம்பளாச்சேரி இன மாடுகள். இவை வருடத்தின் எல்லா நாட்களிலும் கூட ஒரே நிறத்தில் இருப்பதில்லை.பருவகாலம்,மேய்ச்சல்,இனப்பெருக்கம்,வயது என பல காரணங்களினால் இவை தொடர்ந்து நிறம் மாறும்.இவ்வாறாக உம்பளாச்சேரி இனம் தன் வாழ்நாளில் ஒன்பது நிறங்களிலில் மாறும் இயல்புடையது.அவற்றுள் சில.
கன்றுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் வெள்ளை மறைகளுடன் 2 மாத வயதுவரை இருக்கும்.
3 லிருந்து 10 மாதம் வரை சாம்பல் நிறத்தில் இருக்கும்.அதன் பிறகு உண்மை நிறத்திற்க்கு மாறும்.
காளைக்கன்றுகள் காயடிக்கபட்டால் வெண்மை மற்றும் மட்டி நிறங்களில் மாறும்.
பொலிகாளைகள் அடர் மற்றும் கரம்பை நிறங்களில் இருக்கும்.
பசுக்கள் மற்றும் கிடாரிகள் சினைப்பிடித்து கொண்டால் சாம்பல் உரோமங்கள் மறைந்து பட்டுபோன்ற கருமை நிறம் பெறும்.கன்று ஈன்று மூன்று மாதத்தில் பழைய நிறம் திரும்பும்.
மழை மற்றும் குளிர் காலங்களில் உரோமம் அதிகம் வளர்ந்து கபில நிறமாக மாறும்
சித்திரை மாதம் பருவகால கிடைக்கு சென்று நல்ல மேய்சலில் இருந்து ஆடி மாதம் வீடு திரும்பும் பல பசுக்கள் நிறம் மாற்றத்தினால் பல சமயங்களில் அதன் உரிமையாளர்களால் கூட அடையாளம் காண முடியாமல் போகும் அந்த அளவிற்க்கு நிறமாற்றம் நிகழும் இனம் உம்பளாச்சேரி.
உம்பளச்சேரி இன மாடுகளின் தோற்றம், பரவல், இனப்பெருக்கத்திறன், உணவு பழக்க வழக்கங்கள், அங்க அடையாளங்கள், வேலை செய்யும் திறன், உபயோகம், பெருமை இவை அனைத்தும் எளிய கவிதை நடையில்.
நெத்தியில பொட்ட பாரு- நெடுவெடையா உருவம் பாரு
தெக்கத்தி மாட்ட பாரு- திணவெடுத்த தேகம் பாரு
நாவெடாயா காத பாரு- நரூசான சூட்ட பாரு
வெடுவாலில் குஞ்சம் பாரு- கொம்பு மட்டும் பஞ்சம் பாரு
உப்பளருக கடிக்கும் பாரு- ஓங்கு தாங்கா வளரும் பாரு
சரியாத திமில பாரு- சளைக்காது உழவில் பாரு
நிறம் மாறும் அங்கம் பாரு- தரம் மாறா தங்கம் பாரு
பலகை போல முதுகை பாரு- பாய்ச்சலுல சிங்கம் பாரு
சல்லிக்கட்டில் விட்டு பாரு- சுத்து மாடா குத்தும் பாரு
நுகத்தடியில் நுழைச்சு பாரு- நூறு கலம் இழக்கும் பாரு
போரடியில் புனைச்சு பாரு தார் குச்சே வேண்டாம் பாரு
வலசை போகும் அழக பாரு வருசம் ஒரு கன்ன பாரு
கடை சேர்ந்த பிறகும் பாரு கன்னு போல உழைக்கும் (ஊக்கம் ) பாரு.
தூண் போல கால பாரு- மான் போல வேகம் பாரு
தட்டு ரெண்டில் மறய பாரு- சிட்டு போல பறக்கும் பாரு
பட்டறையில் பூட்டி பாரு- பந்தயத்தில் ஜெயிக்கும் பாரு
வெங்கொளம்பு எட்ட(டு) பாரு- வெள்ளி லாடம் கட்ட பாரு
தஞ்சாவூர் மாட்ட பாரு- தங்க லாடம் கட்ட பாரு
கழிமுகத்தின் முத்த(து) பாரு- சோழநாட்டின் சொத்த(து) பாரு
|