இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
ஆரியரின் மண்பானை கலாச்சாரம் (கி.மு 1025 முதல் - +75) என்று 1980ல் கங்கை சமவெளி பகுதிகளில் (ஆரியர் வாழ்ந்த பகுதிகள்) நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டது. மேலும் அக்காலத்தில் ஆரிய சார்பாளராக செயல்பட்ட தொல்துறை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் ஆல் இக்காலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரியரின் மண்பானை கலாச்சாரம் கி.மு 1100 கு மேல் வர எவ்வித வாய்ப்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக கூறப்பட்டது. இதனால் 1980 கு பிறகு வெளிவந்த அனைத்து மொழி நூல்களிலும் ஆரியர்கள் பாரத கண்டம் (இந்தியா) வந்த காலம் கி.மு 1200 கு பிறகே என்று எழுதப்பட்டது. மேலும் ரிக்வேதம் வாய்மொழி வாயிலாக சொல்லப்பட்டு பழக்கப்பட்ட காலம் கி.மு 11 ஆம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்களால் அக்காலத்தில் எழுதப்பட்டது. ஆனால் இன்று ஆரியர்கள் இந்தியா வந்த காலம் கி.மு 1500 என்று கூறுவது உண்மை வரலாற்றை மாற்ற நினைப்பதாகும்.(எவ்வித சான்றும் இல்லாமல்).
 
ஆரியர்கள் தமிழகம் நுழைந்த காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டாகும்.தமிழகம் நுழைந்த ஆரியர்கள் மக்கள் நாகரிகமாக வாழ்வதையும் ,மன்னர் ஆட்சி முறை நடைமுறையில் இருந்ததையும் பார்த்த அவர்கள் மேலும் பார்த்த அதியசயமே இந்திர விழா ஆகும் . அது தமிழ் மூவேந்தர்களால் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுவதை பார்த்த பிறகுதான், இந்திரன் தமிழர்களால் பல நூற்றாண்டுகளா கொண்டாடப்படுவது தெரியவருகிறது. சில வருடங்களுக்கு பிறகு கங்கை சமவெளிக்கு திரும்பிச்சென்றனர். அதற்கு பிறகே இந்திரன் ஆரியர்களின் கடவுள் இல்லை என்று புரிந்து கொண்டு முடிவு செய்த அவர்கள் தனது புராணங்களில் (கி.மு 6 ஆம் நூற்றாண்டுகளில்) இந்திரனை இழிவாக பேச தொடங்கியுள்ளனர். கி.மு 11ஆம் நூற்றாண்டடுக்கு பிறகு கூறப்பட்ட ரிக் வேதத்தில் இந்திரனை உயர்வாக பேசிய ஆரியர்கள் (கி.மு 6 ஆம் நூற்றாண்டின்) ஆரம்ப காலங்களில் கூறப்பட்ட ராமாயணம், பிறகு கூறப்பட்ட மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் இழிவாக பேசியுள்ளனர். இது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் இந்திரன் தமிழர்களின் கடவுள் என்று புரிந்து கொண்டதால்தான் ஆரியர்களால் சில வருடத்திற்க்குள்(140-2 ஆம்50 நூற்றாண்டுகளுக்குள்வருடத்திற்க்குள்) இந்திரனை அந்நிய நாட்டு இறைவன் என முடிவு செய்ய முடிந்தது.
 
இலங்கை நூலான மகாவம்சத்தின்படி இலங்கையை அடைந்த முதல் ஆரியன் விஜயன் என்பவன் .இவன் பாண்டியனின் மகளை திருமணம் செய்து கொண்டவன். இவன் இலங்கையை கி.மு 543 ல் அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதனால் ஆரியர்கள் கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் நுழைந்துவிட்டனர் என்பது இவ்விடத்திலும் உறுதியாகிறது. (அதாவது கி.மு 8 ஆம் நூற்றாண்டு - மத்தியப்பகுதி ஆகும்). ஆம் தமிழ் மூவேந்தர்களால் வெகு விமரிசையாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்ட இந்திர விழா கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு(சிலப்பதிகார காலம்) பிறகு அதன் வலிமையை இழந்தது. ஆக இந்திரன் தமிழனே என உறுதிப்படுத்தப்படுகிறது.தமிழர்களின் அனைத்து விழாக்களும் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது. உதாரணமாக தமிழர் விழாவான பொங்கல் விழா ,முருகனின் காவடி ஆட்டம் 2000 வருடத்திற்க்கு முன்பிருந்தே கொண்டாடப்படுவது ஆகும். ஆனால் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைந்த காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டு - மத்தியப்பகுதி ஆகும். அப்படியென்றால் இதற்கு பிறகுதான் இந்திரன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்று கொள்ளும்பொழுது வெறும் 500 வருடம் மட்டுமே கொண்டாடப்பட்டு தமிழ் மூவேந்தர்களால் கைவிடப்பட்டாரா?!. என்ற கேள்வி எழும்புகிறது. மேலும் இதனை . ஏற்றுக்கொள்ளும்பொழுது தமிழ் மொழியும் ,தமிழர் பண்பாடும், ஏன் தமிழ்சசங்க காலத்தை பற்றியும் கூட மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை. எனவே இந்திரன் என்பவன் தமிழர்களின் முன்னோனே என உறுதியாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திரன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது