யாழ்ப்பாணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
== போத்துக்கீசர் காலம் ==
[[யாழ்ப்பாண அரசு]] [[1619]] இல் [[போர்த்துக்கல்|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை [[நல்லூர்|நல்லூரி]]லிருந்து அவர்கள் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு [[கோட்டை]]யையும் கட்டினர். 1619 [[ஆகஸ்ட்]] மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள [[கோவா]]விலிருந்த தலைமையகத்திலிருந்து [[பிலிப்பே டி ஒலிவேரா]]வுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை [[1625]] ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. [[1629]] இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், [[1637]] இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]த் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், [[வைத்தியசாலை]]யொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன.<ref>Ribeiro, Joao., The Histiric Tragedy of the Island of Ceilao (Translated from Portuguese by P. E. Pieris), Asian Educational Services, New Delhi, 1999 (First Published 1909), p. 2013.</ref> போத்துக்கீசரின் [[யாழ்ப்பாண நகரம்]] கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
 
== ஒல்லாந்தர் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது