நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
initial |
middle |
||
வரிசை 35:
உப்பளங்களும் வயல்வெளியும் குளுகுளுவென வீசும் காற்றும் கீழே துள்ளிப்பாயும் மீன்களும் காணப்படும். இது நன்நீர் ஆறல்ல; பறவைக்கடல்; உப்பளங்கழி எனவும் அழைப்பர். கோடை காலத்தில் நீரின் அகலம் இப்படித்தான் குறைந்திருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் 750 மீற்றர் வரை அகன்று நீர் நிறைந்து பாயும். பலத்துடன் சேர்ந்தாற்போல அரைவட்ட வடிவில் கொங்கிறீற்கட்டும், பலகை அடைப்புக்களும் இரும்புக்கதவுகளுமாக அமைந்திருப்பது நீர்ப்பாசன இலாக்காவின் மிக நன்மை பயக்கும் நீண்ட காலத்திட்டம் இது. உவர்தன்மை செறிந்துள்ள இப்பகுதியினை நன்னிலமாக்கும் திட்டம். அவர்களுக்கு எமது நன்றிகளை கூறிக்கொண்டு வரவேற்பு வளைவிலிருந்து வடகிழக்காக வளைந்து வரும் கண்டிவீதியின் சிறிய வளைவோடு கிழக்குநோக்கி திரும்பினால் ஓர் முக்கியமான இடம் மோட்டார் வாகனங்கள் எமது நாட்டிடை எட்டிபார்ப்பதற்கு முன்னர் குதிரை பயணம் செய்த காலம் அது.
[[படிமம்:பாலம் .jpg|thumb|277x277px|பாலம்]]
பாலம் கட்டப்படாதிருந்த அந்த காலத்தில் உப்பளங்கழியை கடப்பதற்கு தென்னை, பனைமரக்குற்றிகளால் பாலம் போன்ற ஒன்றை பயணிகளிடம் இருந்து தலைக்கு இரண்டு சதம் வாரியாக அறவிடப்பட்டதாம். வரி வசூலிப்பதற்காகவும், பயணிகள் தரிப்பதற்காகவும், குதிரை கட்டுவதற்காகவும் கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
[[படிமம்:நாவற்குழி பெயர்பலகை .jpg|thumb|280x280px|நாவற்குழி பெயர்ப்பலகை ]]
வரிசை 45:
யாழ்ப்பாண சரித்திரத்தில் சாவங்கோட்டையும் முக்கியஇடம் பெறுகின்றது. 13 ஆம் நூற்றாண்டில் சந்திரபானு என்னும் சாவுகமன்னன் யாழ்ப்பாண குடாநாடு, வன்னிப்பிரதேசம், திருகோணமலை ஆகிய இடங்களை ஆட்சிசெய்தான் என வரலாறு கூறுகின்றது .(யாழ்ப்பாண இராட்ச்சியம் பக்கம் 31 பதிப்பாசிரியர் – கலாநிதி .சி .க .சிற்றம்பலம் ) சாவக்காடு, சாவங்கோட்டை , சாவகச்சேரி என்பன இதற்கு சான்று பகர்க்கின்றன. பாண்டியனின் படையெடுப்பில் சந்திரபானு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான் என சரித்திரம் கூறும் வேளை, சாவுகரின் ஆட்சி காலத்திலும் அதன் பின்னரும் சாவங்கோட்டை என பெயர் வாங்கப்பட்ட இந்த இடத்தில் சவுகர் கல்லாலும் களி மண்ணாலும் சிறிய கோட்டை ஒன்று கட்டியிருந்தார் என்றும் அக்கோட்டை பாண்டியனால் அழிக்கப்பட்டதென்றும் இங்குள்ள முதியோர் இன்றும் கூறுகின்றனர். இதற்கு தகுந்த ஆதாரம் அகப்படவில்லை. ஆயினும் கோட்டையினை இடித்தெறிந்த பாண்டியர் நிர்சிங்கமல்லன் என்பவனை காவலனாக நியமித்து இருக்க இடமும் ஏனைய வசதிகளும் கொடுத்தார்கள் எனவும் பிற்காலத்தில் அவனுக்கு நினைவாலயம் ஒன்று சாவகன்கோட்டைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
[[படிமம்:புகையிரத நிலையம்.jpg|thumb|புகையிரத நிலையம்|
"முச்சந்தி" என்றும் சாவங்கோட்டை என்றும் பெயர் பெற்றுள்ள இடம் உண்மையிலேயே நாற்சந்தியே. நான்கு வீதிகள் சந்திக்கின்றன. யாழ்ப்பாணம் செல்லும் வீதி , கண்டிவீதி, கேரதீவுவீதி, புகையிரதவீதி. புகையிரத நிலையம் வரை செல்லும் வீதி மிகச்சிறியது. சந்தியில் இருந்து தெற்குபக்கமாக சென்றால் சம்பத்வங்கியினால் அமைக்கப்பட்ட மிகவும் அழகான புதியகட்டடம். அதுவே நாவற்குழி "ரெயில் வேஸ்ரேசன் " போர் தொடங்குவதற்கு முன்னர் கைதடி என்னும் பெரிய கிராமத்தவர்களுக்கும், நாவற்குழி, தச்சன்தோப்பு போன்ற சிறிய கிராமத்தவர்களுக்கும் பிரயாணத்துக்கு அத்தியாவசியமாக விளங்கிய புகையிரதநிலையம் இது. இக்கிராமங்களில் உற்பத்தியான பிரதான பணவரவு தந்த புகையிலை சிற்பம் சிற்பமாக இந்த புகையிரத நிலையத்தில் ரயில் பெட்டிகளில் மலைநாட்டுக்கு அனுப்பப்பட்டன. இக்கட்டடத்துக்கு தென்பகுதியில் பெருந்தொகையான வீடுகள் காணமுடியும் . அவை UNP ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 300 வீடுகள் ஆகும்.
வரிசை 87:
===== கவிஞர் அம்பி =====
[[படிமம்:பொது நூலகம் .jpg|thumb|283x283px|பொது நூலகம் ]]
சித்திர வேலாயுதர் கோயில் வடக்கு வீதியில் இருந்து பார்க்கும் போது வடதிசையில் குலைக்கட்டிகாய்த்து நிற்கும் தென்னைகள் தோன்றும் அந்த இடம் ஈழத்து புகழ் பூத்த கவிஞர் ஒருவரது பிறந்தகமாய் அமைந்ததென்று கூறினால் எமது கிராமத்துக்கே பெருமை . அவர்தாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "அம்பி".
வரி 109 ⟶ 110:
=== நெணியன் வயல்வெளி ===
[[படிமம்:நெணியன் வயல்வெளி .jpg|thumb|297x297px|நெணியன் வயல்வெளி ]]
சித்திரவேலாயுதர் கோவிலை தொடர்ந்து வடக்கு நோக்கி சென்றால் நெணியன் வயல் வெளியை காண முடியும். நடுவே வயல்வெளியும் நாலு பக்கங்களிலும் வீடுகளும், பயன் தருகின்ற மரங்களும் அழகாக தோன்றும். எனது கிராமத்தில் கூடுதலான நெற்பரப்பை கொண்டது மட்டுமல்ல கூடுதலான விளைவை தருவதும் இந்த நெணியன் வயல் வெளியே.
|