ரந்தெனிவலைச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
போர்த்துக்கேயப் படையில், முதலியார்களால் அனுப்பப்பட்ட 13,000 லசுக்காரின் எனப்படும் சிங்களப் படையினரும், 700 போர்த்துக்கேயரும் இருந்தனர். 1630 ஆகத்து 25 ஆம் தேதி போர்த்துக்கேயப் படைகள் மெனிக்கடவரை என்னும் இடத்தில் இருந்து கண்டி இராச்சியத்துக்குள் முன்னேறின. நிலைக்குத்தான மலைத் தொடர்களைக் கடந்து எதிர்ப்பு எதுவும் இல்லாமல் மிக மெதுவாகப் படைகள் பதுளை நகரை அடைந்தன. ஏற்கெனவே மக்கள் வெளியேறிவிட்ட அந்நகரை இரண்டு நாட்களாகச் சூறையாடியாடிய பின்னர் அதைத் தீவைத்து எரித்தனர். அங்குராங்கெட்டையில் இருந்து கண்டியரசனின் மூத்த மகன் மகா அசுத்தனன் தலைமையில் புறப்பட்ட கண்டிப் படைகள் கந்தகெதர என்னும் இடத்தில் போர்த்துக்கேயப் படைகளை நெருங்கின. உடனடியாகவே மோதல்கள் தொடங்கிவிட்டன. தாம் சிறிது சிறிதாகச் சூழப்பட்டு வருவதை உணர்ந்த போர்த்துக்கேயத் தரப்பினர் தம்மிடம் மேலதிகமாக இருந்த சுமைகளையும், தாம் சூறையாடிய பொருட்களையும், எரித்துவிட்டுப் பின்வாங்கத் தயாராகினர். போர்த்துக்கேயரின் வியூகத்தில் ஏழு கோறளைகளையும், கொழும்பையும் சேர்ந்த லசுக்காரின் படைகள் போர்த்துக்கேயரைச் சூழ நின்றன. அமரக்கோன் ராலா மற்றும் சிலரின் உதவியுடன் விக்கிரமசிங்கா என்பவன் லசுக்காரின் படைகளுக்குத் தலைவனாக இருந்தான். பின்னேறத் தொடங்கியதுமே கண்டிப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. போர்த்துக்கேயர் கலையத் தொடங்கினர். அவர்களில் ஒருவனின் தலையைச் சீவிய விக்கிரமசிங்கா அத்தலையை ஈட்டியில் செருகி அதன்மீது வெள்ளைத் துணியொன்றைப் போர்த்தியபடி தனது ஆட்கள் சிலருடன் கண்டிப் படையினர் பக்கம் சேர்ந்துகொண்டான். என்ன நடக்கிறது என்று புரியாது திகைத்து நின்ற ஏனைய லசுக்காரின் படையினர் பலரை அமரக்கோனின் ஆட்கள் கண்டிப் படைகள் பக்கம் துரத்திவிட்டனர்.
இறுதியாக அவனைச் சுடும்படி ஆணை கிடைத்தது. அவனது உதவியாளர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். டி சா வாளை உருவிப் போரிடத் தொடங்கினான். டி சா எவ்வாறு இறந்தான் என்பது குறித்துப் பல கதைகள் காணப்படுகின்றன. கேரோசுப் பாதிரியாரின் குறிப்புக்களின்படி இரண்டு அம்புகள் டி சாவை மார்பிலும் தோளிலும் தாக்க அவன் கீழே விழுந்தான். இன்னொரு அம்பு அவன் உயிரைக் குடித்தது. ஆனால், டி சா உயிருடன் பிடிபடுவதைத் தடுக்கத் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தான் எனத் தான் கண்டிப்படையினர் சொல்லக் கேட்டதை ராபர்ட் நொக்சு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
== விளைவு ==
பல முக்கிய போர்த்துக்கேயத் தளபதிகள் போரில் இறந்தனர். தளபதிகள் உள்ளிட்ட 200 போர்த்துக்கேயர் கண்டிப் படைகளிடம் உயிருடன் பிடிபட்டனர். சபிரகமுவாவின் திசாவை சில லசுக்காரின்களுடன் தப்பிச் சென்றான். ஆனால், அவனும் எல்லையருகே பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். டி சாவின் தலை கண்டியில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக மரம் ஒன்றின் தொங்கவிடப்பட்டது.
== மேற்கோள்கள் ==
|