பதினேழாம்16 நூற்றாண்டில்,துளசிங்க மகராஜன் என்ற ஒரு அரசருக்கும் கற்ப்பகவள்ளி என்ற அரசிக்கும் மகனாக பிறக்கின்றார் . ஆனால் குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறக்கவே மன்னர் மந்திரிகளின் ஆலோசனைகளை நாட, குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனான் என்றால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அந்த குழந்தையை கொள்ள மனமில்லாமல் வெகுதூரம் இருக்கும் ஒருக்காட்டில் சென்று விட்டு விடும்படி கட்டளை இடுகிறார். குழந்தையை சுற்றி சிங்கம், புலி, கரடி, யானை அனைத்தும் மண்டியிட்டு வணங்க நாகம் தலைக்கு மேல் குடைவிறித்திருந்தது. அந்த நேரம் சின்னான் செல்லி என்ற தம்பதியினர் அவ்வழியே செல்ல அக்காட்சியை கண்டு பிரமிப்படைந்தனர். சிறிது நேரத்தில் அந்த விலங்குகள் அவ்விடத்தை விட்டு அகன்றதும் வெகுநாள் குழந்தை பாக்கியம் இல்லாத அவர்கள் அந்த குழந்தையை எடுத்து வீரன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். மதுரை வீரன் என்பவர் உண்மையாக வாழ்ந்த ஒரு மண்ணின் மைந்தர். இவர் அரசபரம்பரையை சேர்ந்தவராவார். ஒரு சிறந்த பெரிய போர் வீரனான அவர் எப்போதும் தன் மக்களை போராடி பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில்.மதுரை நாயக்கரால் ஆழப்பட்டு வந்த மதுரை நகரம் மற்றும் மக்களை, ஒரு வெல்ல முடியாத போரினில் மூலம் சங்கிலி கருப்பர் அச்சிறுத்தி வந்தார். இறுதியாக, மதுரை வீரன் அந்த போரில் கலந்து சங்கிலி கருப்பரை தோற்கடித்து மதுரையை மீத்தார்.