1,16,086
தொகுப்புகள்
|website=
|}}
'''நாவற்குழியூர் நடராஜன்''' (இறப்பு: பெப்ரவரி 17, 1994) எனப்படும் கலாநிதி '''க. செ. நடராசா''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.<ref name=TA/> இவர் [[இலங்கை வானொலி]] தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.<ref name=
==வாழ்க்கைக் குறிப்பு==
கனகசபை செல்லப்பா நடராசா [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[நாவற்குழி]] என்ற ஊரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் [[வையாபாடல்]] என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப் பட்டமும், [[கலாநிதி]] பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் [[தி. ச. வரதராசன்|வரதருடன்]] இணைந்து ''மறுமலர்ச்சி சங்கத்தை'' நிறுவி [[மறுமலர்ச்சி (இதழ்)|மறுமலர்ச்சி]] என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
நடராசன் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் [[சானா (சண்முகநாதன்)|சானா]]வின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் [[இலங்கை வானொலி]]யில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 ''சிலம்பொலி'' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் [[மெல்லிசை]]ப் பாடல்களாக ஒலிபரப்பாயின.<ref name=
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் [[கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்]]] தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.<ref name=
==வெளிவந்த நூல்கள்==
|