அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்திய வரலாறு using HotCat |
|||
வரிசை 43:
அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டான் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவியை, கில்சியின் படைத்தலைவர்கள் சிறை பிடித்து அலாவுதீன் கில்சியின் முன் நிறுத்தினர். கில்சி, கமலாதேவியின் அழகில் மயங்கி, அவளை [[இசுலாம்|இசுலாமிய சமயத்திற்கு]] வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவளது ஒப்புதல் இன்றி கில்சி அவளை திருமணம் செய்துகொண்டு, பட்டத்தரசியாக்கிக் கொண்டார்.
===
அலாவுதீன் கில்சியின் பல மனைவிகளில் ஒருத்தியான ’சிம்னா’ என்பவர், முகமது சா என்ற படைத் தலைவருடன் (அலாவுதீன் கில்சியின் அண்ணன் மகனும், தில்லியின் முதல் சுல்தானுமான சலாலுதீன் கில்சி என்பவரை கொன்று, அலாவுதீன் கில்சியை தில்லி சுல்தானாக கொண்டுவருவதற்கு சதி திட்டம் தீட்டியவர்தான் இந்த முகமது சா) கூட்டு சேர்ந்து அலாவுதீன் கில்சியை கொன்று நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர். இந்த சதி திட்டத்தை தனது உளவாளிகள் மூலம் அலாவுதீன் கில்சி அறிந்து கொண்ட செய்தியை அறிந்த முகமது சா உடனடியாக தில்லியை விட்டு தப்பி ஓடி, இராசபுதன அரசர்களில் உறுதியான கோட்டைகள் மற்றும் அதிக படைபலம் மிக்க இராசபுத்திர
இதனை அறிந்த சுல்தான் அலாவுதீன் கில்சி கடுஞ்சினமடைந்து,
மன்னர் அமிர் தேவனின் முதன்மை அமைச்சருக்கும், தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனி (Gurdan Saini) என்பவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த மனக்கசப்பு இப்போரில் வெளிப்பட்டதால், கில்சிக்கும், அமிர் தேவனுக்கும் இடையே நடந்த போரின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. இராசபுத்திர மன்னர் அமிர் தேவனின் தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனியை, முதல்அமைச்சர் நயவஞ்சமாக கொன்று விட்டார். இதனால் அமிர் தேவ் சௌகானின் படைகள், படைத்தலைவர் இன்றி கட்டுக் குலைந்தன.
வரிசை 56:
மன்னர் அமிர் தேவனின் அரச துரோகிகள் கில்சிக்கு, அமிர்தேவனின் இரந்தம்பூர் கோட்டைக்குள் இருக்கும் உணவு, குடிநீர், படைக்கலன்கள் இருப்பு பற்றிய இரகசியங்களை அவ்வப்போது கில்சிக்கு கூறிக்கொண்டே இருந்தனர். ஒரு கால கட்டத்தில் கோட்டையில் குடிநீர் இருப்பு தீர்ந்து விட்ட நிலையில், அலாவுதீன் கில்சி இரந்தம்பூர் கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் போது, அங்கு இராசபுத்திர குலப்பெண்கள் அனைவரும், சத்திரிய குல மரபுப்படி, தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். அவர்களது சாம்பலையும் எலும்புகளையும் மட்டுமே கில்சியால் பார்க்க முடிந்தது. மற்ற இராசபுத்திர வீரர்கள் சாகும் வரை (Shaka) கில்சியின் படைவீரர்களுடன் போரிட்டனர்.
சொந்த நாட்டை அயலானிடம் காட்டிக் கொடுத்த இராச துரோகிகளான போச தேவன் போன்ற உயர்அலுவலர்கள், தங்களின் சதி ஆலோசனைகளின்படி செயல்பட்டு கில்சி இந்த போரில் வெற்றி பெற்றதால், தங்களுக்கு அளப்பரிய வெகுமதிகள் கில்சி தருவார் என்று காத்திருக்கையில், மன்னர் அமிர்தேவனுக்கு துரோகம் செய்த போச தேவன் போன்ற உயர் அதிகாரிகளின் தலைகளை வெட்ட கட்டளையிட்டார் கில்சி. கில்சி, தனக்கு துரோகம் இழைத்த முகமது சா என்பரை தன் கையாலேயே விசம் குடிக்க வைத்து கொன்றார்.
===மேவார்===
|