இல்லறவியல் (திருக்குறள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை துணைநலம்: Contents moved to Wikibooks. Pls develop an article reg this topic here.
→‎புதல்வரை பெருதல்: Contents moved to Wikibooks. Pls develop an article reg this topic here.
வரிசை 9:
வாழ்க்கை துணைநலம்
 
===புதல்வரை பெருதல்===
----
:'''61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த'''
::'''மக்கட்பெறு அல்ல பிற.'''
::*அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.
 
:'''62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்'''
::'''பண்புடை மக்கட் பெறின்.'''
::*பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின் ஏரேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
 
:'''63. தம்பொருள் என்பதன் மக்கள் அவர்பொருள்'''
::'''தம்தம் வினையாம் வரும்.'''
::*தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
 
:'''64. அமிழ்தினும் ஆற்ற இனிதெதம் மக்கள்'''
::'''சிறுகை அளாவிய கூழ்.'''
::*சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சிக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்த்தை விடச் சுவையானதாகி விடுகிறது.
 
:'''65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்'''
::'''சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.'''
::*தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை முழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
 
:'''66. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்'''
::'''மழலைச்சொல் கேளா தவர்.'''
::*தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
 
:'''67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து'''
::'''முந்தி இருப்பச் செயல்.'''
::*தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
 
:'''68. தம்மிந்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து'''
::'''மன்னுயிர்க் கெல்லாம் இனிது.'''
::*பெற்றோரை காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
 
:'''69. ஈன்ற் பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்'''
::'''சான்றோன் எனக்கேட்ட தாய்.'''
::*நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை அந்த தாய் அடைவாள்.
 
:'''70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை'''
::'''என்நோற்றான் கொல்எனும் சொல்.'''
::*'ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு', என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
 
===அன்புடைமை===
"https://ta.wikipedia.org/wiki/இல்லறவியல்_(திருக்குறள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது