இல்லறவியல் (திருக்குறள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புதல்வரை பெருதல்: Contents moved to Wikibooks. Pls develop an article reg this topic here.
→‎அன்புடைமை: Contents moved to Wikibooks. Pls develop an article reg this topic here.
வரிசை 11:
புதல்வரை பெருதல்
 
===அன்புடைமை===
----
:'''71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்'''
::'''புன்கணீர் பூசல் தரும்.'''
::*உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
 
:'''72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'''
::'''என்பும் உரியர் பிறர்க்கு.'''
::*அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
 
:'''73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு'''
::'''என்போடு இயைந்த தொடர்பு.'''
::*உயிரும் உடலும் போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
 
:'''74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்'''
::'''நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.'''
::*அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
 
:'''75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து'''
::'''இன்புற்றார் எய்தும் சிறப்பு.'''
::*உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
 
:'''76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்'''
::'''மறத்திற்கும் அஃதே துணை.'''
::*வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
 
:'''77. என்பி லதனை வெயில்போலக் காயுமே'''
::'''அன்பி லதனை அறம்.'''
::*அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைபிடிகாதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவது போல இருக்கும்.
 
:'''78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்'''
::'''வற்றல் மரந்தளிர்த் தற்று.'''
::*மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
 
:'''79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை'''
::'''அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.'''
::*அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
 
:'''80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு'''
::'''என்புதோல் போர்த்த உடம்பு.'''
::*அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
 
===விருந்தோம்பல்===
"https://ta.wikipedia.org/wiki/இல்லறவியல்_(திருக்குறள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது