கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:சமய வழிபாட்டிடங்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Petersdom von Engelsburg gesehen.jpg|right|thumb|225px|[[வத்திக்கான் நகர்|வத்திக்கான் நகரின்]] [[புனித பேதுரு பேராலயம்]]]]
[[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் '''தேவாலயம்''' அல்லது '''கோவில்''' (சர்ச்) என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறித்தவர்களின் கோவில் "மாதா கோவில்" என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க கோவில்கள் [[மரியா (இயேசுவின் தாய்)|இயேசுவின் அன்னையாகிய மரியாவின்]] பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். இத்தேவாலயத்தில் தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார். அவரைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைப்படி, கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வழிபாடுகளைச் செய்கின்றனர். பல தேவாலயங்கள் [[சிலுவை]] உருவில் வடிவமைக்கப்படுகின்றன. கோபுரம் அல்லது கும்மட்டம் உடையதாக இருக்கின்றன. கிறித்தவ சமயத்தின் முன்னோடி போல் அமைந்த [[யூதம்|யூத]] மதத்தில் "தொழுகைக் கூடம்" (synagogue) உண்டு. யூத வழக்கத்தைப் பின்பற்றி கிறித்தவர்களும் வழிபாட்டுக்கென தனியே தேவாலயங்கள் கட்டத் தொடங்கினர். ஐரோப்பாவில் கிறித்தவம் முதன்மையான மதமான பின்னர் பெரும் எண்ணிக்கையிலும் அளவிலும் தேவாலயங்களை அமைப்பது வழக்கமானது.
==தேவாலய கட்டிடங்களின் வரலாறு==
[[File:Church of Saint Simeon Stylites 01.jpg|thumb|right|புனித சீமோன் ஸ்டைலைட், [[அலெப்போ]], சிரியா. உலகிலேயே மிகப்பழைய கிறுத்தவ ஆலயம்]]
ஆதிகிறித்தவர்கள் [[இயேசு கிறித்து]] போலவே [[இரண்டாம் கோவில் (யூதம்)|எருசலேம் கோவிலில்]] வழிபாடும், தொழுகைக்கூடங்களில் இறைவேண்டலும் செய்துவந்தனர். கோவிலில் வழிபாட்டில் [[யாவே]] கடவுளுக்கு பலிசெலுத்துவதும், பாவப்பரிகாரம் செய்வதும் வழக்கமானதாகும். [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்]] முதலாக பல இடங்களில் இயேசு கோவிலுக்கு செல்வதாக அமைந்துள்ளது.
மத்தியக்காலத்தில் மிகப்பெரும் கோவில்கள் கட்டுவது அரசனுடைய வெற்றியையும் அவனின் செல்வத்தையும் குறிப்பதாக இருந்தது. பல்வேறுகாலக்கட்டதின் சூழ்நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்ப கோவில்களின் வடிவமைப்பு மாற்றமடைந்துள்ளது. துவக்க காலத்தில் சிலுவை வடிவிலும், கிழக்கை நோக்கியுமே கோவில்கள் அமைந்தன. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் கிழக்கில் வருவார் என்னும் நம்பிக்கைக்காகவே இது நிகழ்ந்தது. கோவில்கள் மிக அழகானதாகவும், ஒரு ஊரின் மிக உயரியக்கட்டிடமாகவும் இருந்து வந்தது. அரசனின் மாளிகை கூட
== தேவாலய வகைகள் ==
=== சிற்றாலயம் ===
சிற்றாலயம் (Chapel) எனப்படுவது ஒரு தனிபட்ட நபரோ (எ.கா: அரசர்கள், ஆயர்கள்...) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்..) வழிபட பயன்படுத்தும் ஆலயம். பெரியதொரு கோவிலின் உள்ளே அமைக்கப்படுகின்ற சிறுகோவில்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. உதாரணமாக, உலகப் புகழ் பெற்ற [[மைக்கலாஞ்சலோ]]வின் சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ள வத்திக்கான் கோவில் "[[சிஸ்டைன் சிற்றாலயம்]]" (Sistine Chapel) ஆகும்.
{{main|புனித பேதுரு பேராலயம்}}
வரி 28 ⟶ 18:
=== பேராலயம் ===
பேராலயம் அல்லது பெருங்கோவில் (Basilica
உரோமையில் அமைந்துள்ள உயர் பேராலயங்கள் இவை:
வரி 42 ⟶ 32:
[[Image:Roma-san giovanni03-crop.jpg|left|thumb|100px|திருத்தந்தையின் கதீட்ரலான [[புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்|இலாத்தரன் பேராலயத்தில்]] உள்ள திருத்தந்தையின் அறியணை (Cathedra)]]
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் இதனை ''மேற்றிறாசனம்'' (மேற்றிராணியார்+ஆசனம்) என அழைப்பர். இதை மறைமாவட்ட பேராலயம் என்று அதிகாரப்பூர்வ ஏடுகளில் அழைகின்றனர்.<ref>திருச்சபை சட்டம் 508</ref> இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும். ஒரு மறைமாவட்டத்தில் பேராலயங்கள் (Basilica) வேறு இருந்தால், கதீட்ரலை முதன்மைக் பேராலயம் என அழைப்பர். ஆலயத்தகுதி வரிசையில் பேராலயமும் கதீட்ரலும் சம இடத்தைப்பெருகின்றன. ஆயினும் கதீட்ரலுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இக்காரனத்துக்காக பொதுவாக மறைமாவட்டப் பேராலயங்களுக்கு தனியாக பசிலிக்கா தகுதி வழங்குவது முக்காலத்தில் இருந்தாலும், இப்போது மிக அரிதானதாகும். ஒரு மறைமாவட்டத்தில் ஒரே ஒரு முதன்மைக் கோவில் மட்டுமே இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை-முதன்மைக் கோவிகள் (co-cathedrals) இருக்கலாம். ''Cathedral'' என்னும் சொல் "இருக்கை" அல்லது "அறியணை" என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்தும் அதோடு தொடர்புடைய இலத்தீன் சொல்லிலிருந்தும் வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அறியணை இருக்கும். ஆயர் கதீட்ரலிலிருந்து ஆட்சிசெய்வதாகவும் கொள்ளப்படும். அக்கோவிலின் பொறுப்பாளர் மறைமாவட்ட ஆயரே ஆவர். வழக்கமாக, அப்பங்கை நேரடியாக நிர்வகிக்க ஒரு மேல்நர் (Rector) நியமிக்கப்படுவார். மேலும் ஆயரின் உறைவிடமும் மறைமாவட்டச் செயலகங்களும் மறைமாவட்ட முதன்மைக் கோவிலின் அருகே அமைந்திருப்பது வழக்கம்.
== படத்தொகுப்பு ==
|