சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
''சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த [[நாயனார்]] பற்றி [[கழறிற்றறிவார் நாயனார்]] கட்டுரையைப் பார்க்க.''
 
'''சேரமான் பெருமாள்''' ([[English]]: Cheraman Perumal; [[Malayalam language|Malayalam]]:ചേരമാൻ പെരുമാൾ; [[Arabic language|Arabic]]: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .<ref>இந்த அரசப்பெயர் சில சமயம் [[ராஜசேகர வர்மன்]] மற்றும் [[ராம வர்மா குலசேகரன்]] அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், [[ஹெர்மன் குண்டேர்ட்]] என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), ''Kerala Pazhama'': Gundert's ''Antiquity of Kerala''.</ref>
இந்தியாவில் முதல் நபராக இஸ்லாத்தை தழுவி,இந்தியாவில் முதல் மசூதியை கட்ட உதவியவர் ஒரு தமிழன் என்பது மகிழ்ச்சியான செய்தி.
 
முகநூல் நண்பரும்,சமூக ஆர்வலருமான முஹம்மது ஷிப்லி பதிவிலிருந்து....
 
Cheraman Juma Masjid is the first masjid in India!
 
மன்னர் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்ற முதல் இந்தியர் !!
 
சேரமான் பெருமாள்(Cheraman Perumal)என்பவர்தான் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்ற முதல் இந்தியர் ஆவார்.இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.அதன் காரணமாகவே சேரமான் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படுகிறது.
 
சேரநாடு
 
சேரமான் பெருமாள் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார்.இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது.சேரநாடு இஸ்லாம் வருவதற்கு முன்பே அரபியர்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது என்பது வரலாறு உண்மை.
 
சேரமான் பெருமாளின் ஆன்மீக தேடல்
 
வியாபார நோக்கமாக சேரநாடு வந்து செல்லும் அரேபிய வணிகர்கள் கூட்டம் மூலம் முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றியும்,இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் கேள்விப்பட்டு,மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரேபிய கூட்டத்துடனேயே மக்காவிற்கு சென்று முஹம்மது நபி(ஸல்)
அவர்களை சந்தித்தார்.அதன் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றார் சேரமான் பெருமாள்.
 
"இந்த சம்பவம் தொடர்பாக இமாம் ஹாக்கீம் நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி(ரலி) கூறியதாக அல் முஸ்தராக் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகின்றார்: இந்தியாவிலிருந்து முஹம்மது நபி(ஸல்)அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடி நிறைய ஊறுகாய்களை கொண்டுவந்திருந்தார்;அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது;அதை முஹம்மது நபி(ஸல்)அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்;அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
சேரமான் பெருமாளின் மரணம்
 
தான் பெற்ற இஸ்லாமிய கொள்கைகளை இந்தியாவிலுள்ள மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல இஸ்லாமிய அறிஞர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார்.ஆனால் இந்தியா திரும்பும் வழியில் ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில்(Port of Zabar,Yeman)நோய் தாக்கி இறந்தார்.அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.அவர்களது அடக்கஸ்தலம் இன்றும் ஓமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில்(இன்றைய சலாலா)இந்திய மன்னரின் அடக்கஸ்தலம் என்ற பெயரில் உள்ளது.ஓமன் நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் அந்த பாலைவனத்தில் சலாலா மட்டும் தென்னந்தோப்புகள் நிறைந்த கேரள பகுதிகளை நினைவுபடுத்த கூடியதாக இருக்கும்.இந்திய அரபு வணிகத்தில் சலாலாவிற்கு முக்கிய பங்கு உண்டு.
 
இந்தியாவில் இஸ்லாம்
 
சேரமான் பெருமாள் இறந்த பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் தலைமையிலான குழு சேர நாட்டை அடைந்தது.அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர்.அதில் சேரமான் பெருமாள் தனது குடும்பத்தாருக்கு தான் ஏற்ற இஸ்லாமிய கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கவும் மற்றும் மசூதிகளை கட்டவும் மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறு எழுதி இருந்தார்.அதை ஏற்ற மன்னர் குடும்பம் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி மக்களுக்கு சொல்வதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது.அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 629-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.
சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி என்பதால் மன்னர் சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.
 
சேரமான் ஜூம்மா பள்ளியில் 81 வருடம் முஅத்தீன் பணி செய்தவர்
 
சேரமான் ஜூம்மா மசூதியின் வலது புறம் சிறிய அருங்காட்சியகமும்,
அலுவலகமும் இருக்கிறது.அருங்காட்சியகத்தில் சேரமான் ஜூம்மா பள்ளியில் பழைய வடிவமைப்பு மாதிரியை வைத்துள்ளனர்.இடது புறம் ஹபீப் இப்னு மாலிக் மற்றும் அவரது மனைவி கமரியா என்று சொல்லப்படுகின்ற இரு அடக்கஸ்தலங்கள் இருக்கிறது.பின்புறம் குளம் ஒன்றும் இருக்கிறது.சேரமான் பள்ளியில் 81 வருடங்கள் முஅத்தீனாக(தொழுகைக்கு அழைப்பவர்)இருந்த செய்யது முஹம்மது அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.அவர் தனது 11 வயதுக்குள் குர்ஆனை மனனம் செய்து இருந்தவர்.அவரது குடும்பம் தொடர்ந்து பல தலைமுறைகளாக சேரமான் பள்ளியில் முஅத்தீன் பணியை செய்து வந்ததால்,செய்யது முஹம்மதிற்கு பள்ளி நிர்வாகம் 11 வது வயதிலேயே முஅத்தீன் பணியை வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.அவர் தனது 91 வது வயது வரை முஅத்தீன் பணியை செய்திருக்கிறார்.தற்பொழுது அவரின் வயது 94.
சேரமான் என்ற பெயரில் பல மன்னர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர்தான் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.
 
==சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்==
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_பெருமாள்_தொன்மக்கதைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது