தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 28:
1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், [[நேட்டால்|நேட்டாலிலும்]] 19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்<ref name="countrystudies-15">{{cite web |url=http://countrystudies.us/south-africa/15.htm |title=Africans and Industrialization |accessdate=2008-07-14 |author=U.S. Library of Congress |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=US Federal Research Division of the Library of Congress |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref><ref name="wcupa-his311">{{cite web |url=http://courses.wcupa.edu/jones/his311/lectures/22sa-boe.htm |title=HIS 311 Lecture on Southern Africa 1800-1875 |accessdate=2008-07-14 |author=Jim Jones |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=West Chester University of Pennsylvania |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref><ref>{{cite web |url=http://www.ccds.charlotte.nc.us/History/Africa/04/Jsmith/Jsmith.htm |title=Pass Laws |accessdate=2008-07-14 |author=Jessica Smith |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=Charlotte Country Day School |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref>.
 
1892 ஆம் ஆண்டில் பிரித்தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றினர். இது, நிதி, கல்வி ஆகியவற்றின் அடைப்படையில் கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தியது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, [[நேட்டால் சட்டசபைச் சட்டம் 1894]], இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1905 ஆம் ஆண்டில் [[லக்டென் ஆணைக்குழு]], [[பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டம்|பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டத்தை]] நிறைவேற்றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாகவே பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கியதுடன், கண்டனத்துக்கு உள்ளான அநுமதிச்அனுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது. பின்னர் கொண்டுவரப்பட்ட [[ஆசியர் பதிவுச் சட்டமூலம் (1906)]] எல்லா இந்தியர்களும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், அநுமதிச்அனுமதிச் சீட்டுக்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. [[தென்னாபிரிக்கச் சட்டமூலம் (1910)]] வெள்ளையருக்கு வாக்குரிமையை அளித்து எல்லா இனத்தவரையும் ஆளும் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது. உள்ளூர் நிலச் சட்டம் (1913), கேப் பகுதியில் உள்ளவர்கள் தவிர்ந்த பிற கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்குவதைத் தடை செய்தது. நகர்வாழ் தாயக மக்கள் சட்டம் (1918) குறிப்பிட்ட இடங்களுக்குக் கறுப்பு இனத்தவரைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதற்காக இயற்றப்பட்டது. [[நகரப் பகுதிகள் சட்டமூலம் (1923)]] தென்னாபிரிக்காவில் வாழிடப் பகுதிகளைப் பிரித்து அமைப்பதையும், வெள்ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான [[தொழிலாளர்]]கள் கிடைப்பதற்கு வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. நிறத் தடைச் சட்டம் (1926) திறமைகள் தேவைப்படும் தொழில்களில் கறூப்பு இனத்தவர் ஈடுபடுவதைத் தடை செய்தது. பிரித்தானியரால் இயற்றப்பட்ட கடைசி இனவொதுக்கல் சட்டம் [[ஆசிய நிலவுடைமைச் சட்டம் (1946)]] ஆகும். இது ஆசியர்களுக்கு [[நிலம்]] விற்பதைத் தடை செய்தது.
 
கேப் குடியேற்றத்திலும், நேட்டாலிலும் கறுப்பினத்தவர், நகர வீதிகளில் இருட்டியபின் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் எப்போதும் அவர்கள் அநுமதிச்அனுமதிச் சீட்டுக்களையும் வைத்திருக்க வேண்டும். இளம் வழக்கறிஞராக இருந்த [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தி]], நடுத்தர வகுப்பு இந்தியர்களைப் பாதித்த தடைகளுக்கு எதிராக வன்முறை சாராத எதிர்ப்புக்களை ஒழுங்கு செய்ததன் மூலம் தனது அரசியல் நடவடிக்கைகளை இக் காலத்தில்தான் தொடங்கினார்.
 
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் [[ஜான் ஸ்மத்ஸ்]] (Jan Smuts) என்பவரின் ஐக்கியக் கட்சி அரசு, பிரிவினைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக இறுக்கம் காட்டாமல் இருந்தது. இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் காலப்போக்கில் நாட்டில் இனக்கலப்பை உருவாக்கும் என்ற அடிப்படையில், ஐக்கியக் கட்சியின் கொள்கைகளின் விளைவுகளை ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இனத் தொடர்புகள் எல்லா இனக் குழுக்களிலும் ஆளுமை இழப்புக்களை உருவாக்கும் என ஆணைக்குழு முடிவு வெளியிட்டது. பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட இனவொதுக்கல் கொள்கை முன்னைய அரசுகளின் இனங்களை வேறுபடுத்தி வைக்கும் கொள்கைகளின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருந்தது.
 
பெண்களுக்கு அநுமதிஅனுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
 
== 1948 ஆம் ஆண்டுத் தேர்தலும் குழுப் பகுதிகள் சட்டமும் ==
வரிசை 41:
விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. எனினும் இதற்காகத் தனியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், குழுப் பகுதிகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுகளிலும் இனவொதுக்கலை அரசு நடைமுறைப்படுத்தி வந்தது.
 
அரசு நடைமுறையில் இருந்த அநுமதிஅனுமதி அட்டைச் சட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. கறுப்பினத்தவர் வெள்ளையர் பகுதிகளுக்குள் இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக அவர் கள் எப்போது, அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டனர். நகரங்களில் பணிபுரியும் கறுப்பினத்தவர் அப்பகுதிகளில் வாழ்வதற்கு அநுமதிக்கப்பட்டனர்அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அநுமதிஅனுமதி இல்லையாதலால், இத்தகைய பணியாட்கள் தமது மனைவி, மக்களைப் பிரிந்தே வாழ வேண்டியதாயிற்று.
 
== நிற இனத்தவரின் வாக்குரிமை பறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தென்னாபிரிக்காவின்_இனவொதுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது