தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎தைப்புத்தாண்டு சர்ச்சை: ஒருதலையான கருத்தை நீக்கி, நடுநிலையான கருத்துகளைச் சேர்த்துள்ளேன்.
வரிசை 31:
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல; என்ற எண்ணக்கரு 1970களில் தமிழ்நாட்டில் தோன்றியது. இவ்வெண்ணக்கரு 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் அறிமுகமான திருவள்ளுவர் ஆண்டுத்தொடரை அடுத்து ''தைமாதமே தமிழர் புத்தாண்டு'' என்ற கருத்துக்கு வித்திட்டது.<ref>{{cite news | url=http://viduthalai.in/previousyear/other-news/97-essay/32443-2012-04-20-09-57-49.html | title=திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் | work=விடுதலை நாளிதழ் | date=20 ஏப்ரல் 2012 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=நா. கணேசன்}}</ref> இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தைம் மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.<ref>[http://www.tn.gov.in/tnassembly/Governors_address_Jan2008_2.htm தமிழ்நாடு அரசின் அறிவிப்பு]</ref> எனினும் 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.<ref name=cancel>[http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110823_newyeartamil.shtml 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.]</ref>
 
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்ததாகவும்<ref>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1083 | title=ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்? | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref>, சங்க இலக்கியங்களில் தையே புத்தாண்டு என்ற குறிப்பு இருப்பதாகவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர். எனினும், தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லை.<ref>{{cite web | url=http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/ | title=தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று! | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> இன்னும் 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லை.<ref>{{cite web | url=http://maalan.co.in/?p=661 | title=ஆண்டும் ஆள்வோரும் | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> மேலும், 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல் கொண்டாடினார் என்பதே உண்மையாகும்.<ref name="tamilhindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | publisher=தமிழ்ஹிந்து | date=23 பெப்ரவரி 2013 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=பால.கௌதமன்}}</ref> இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின என்பது சனாதனவாதிகளின் வாதம்.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref> அதே நேரத்தில் தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் வந்தது எப்படியென்றும் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லப்படும் சித்திரைப் புத்தாண்டு அதே வடமொழிப் பெயர்களோடு பிற மொழி பேசுகின்றவர்களால் இந்துமதப் புத்தாண்டு என்று ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதையும் சனாதனவாதிகளால் விளக்க முடியவில்லை. சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடியதற்கு எந்த இலக்கியத் தரவும் இல்லாமையால் வடமொழி ஆண்டுகளை தமிழ் மொழியின் மேல் திணிப்பதாகவே தமிழறிஞர்கள் சித்திரைப் புத்தாண்டையும் அறுபது ஆண்டுகளையும் கருதுகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது