24 மனை தெலுங்கு செட்டியார் வாழ்க்கைச் சடங்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி adding unreferened template to articles
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பின்பு கூட நடைமுறைப்படுத்தப்படும் சடங்குகளை 'வாழ்க்கைச் சடங்குகள்' என்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கருவுறுதல், பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்று மனிதர்களின் வாழ்க்கைச் சுழற்சிகளில் செய்யப்படும் சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள் எனப்படும். உதாரணமாக கருவுறுதல், பிறப்புச் சடங்குகள், பூப்புச் சடங்குகள், திருமணச்சடங்குகள், ஈமச்சடங்குகள் போன்ற பல தரப்பட்ட சடங்குகள் சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. அவற்றில் [[24 மனை தெலுங்குச்செட்டியார்]] பின்பற்றும் சடங்குகள் பின்வருமாறு:
 
வரி 15 ⟶ 16:
முதன்முதலாக குழந்தைக்குச் சோறு ஊட்டல் சடங்கு கூட குலதெய்வக் கோவிலிலோ அல்லது இஷ்ட தெய்வக் கோவிலிலோ நடைபெறுவதுண்டு.
==முடிஎடுத்துக் காது குத்துதல்==
குலதெய்வக் கோவில்களில் பிறந்த குழந்தைக்கு முதல் முடி எடுத்துக் [[காதணி விழா|காது குத்தும் சடங்கு]] இந்த இனத்தவரிடையே சிறப்பிடம்பெறும் சடங்காகும். 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தில் அவரவர் குலதெய்வக் கோவில்களில் நடைபெறும் சடங்கு இது. குலதெய்வக் கோவில்களில் பெரிய கும்பிடு என்ற திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும். முடி எடுத்தல் மற்றும் காத்து குத்தல் சடங்குகள் இந்த திருவிழாவின் போதுதான் நடைபெற வேண்டும் என்பது விதி. ஆனால் பல காரணங்களை முன்னிட்டு இவ்விதி தளர்த்தப்பட்டு வருகிறது. காது குத்துதல் என்பது கருவில் உண்டான பாரம்பரியக் குறைகளை நீக்குவதற்காக இச்சடங்கு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. தீமை தரும் ஆவிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் காதில் துளையிட்டு தங்க ஆபரணம் அணிவிப்பதாக நம்பப்படுகிறது.
 
தாய் மாமன் இந்த சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். தன சகோதரி குடும்பத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இவர் மடியில் அமர வைத்து முடிஎடுத்துக் காத்து குத்துவது மாற்ற முடியாத விதி எனலாம். தாய் மாமன் புத்தாடை மற்றும் சீர்செனத்திகளுடன் வந்திருந்து காதுகுத்து விழாவை சிறப்பிப்பார்.
 
==பூப்புச் சடங்கு==
பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் நிகழ்வு 24 மனையாரிடையே மிகவும் மகிழ்வுடனும் சீர் வரிசையோடும் நடைபெறும் சடங்காகும். பெண் உடல் ரீதியாக (தாய்மைக்கு உரிய) கன்னித் தன்மையை அடையும் நிகழ்வே பூப்படைதல் ஆகும். பெண் பூப்பெய்திய உடன் பெண்ணிற்கு நிகழ்த்தப்படும் சடங்கே [[பூப்புனித நீராட்டு விழா|பூப்புனித நீராட்டு சடங்கு]] என்று அறியப்படுகிறது. கிராமங்களில் சடங்கு என்னும் சொல் பூப்புச் சடங்கையே சுட்டும்.
 
இந்தச் சடங்கிலும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் பூப்புச் சடங்கில் தாய் மாமன் தன சகோதரியின் பெண்ணிற்குப் பச்சை ஓலை பந்தல் கொண்டு
குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டுதல் என்பது மரபு. வீட்டை விட்டு ஒதுக்கி வைத்த பின் இந்தப் பெண் இக்குடிசையில் பதினாறு நாட்கள் தங்க வேண்டும். பெண் குடிசையில் தங்கியிருக்கும் நாட்களில் வருங்காலத்தில் அவள் மணமுடித்து கருவுற்ற பின் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை உறவினர்கள் கொடுத்து வலுச்சேர்ப்பதுண்டு. தங்கள் பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கு தெரிவிப்பதே பூப்புச் சடங்கின் குறிக்கோள் எனலாம். பதினாறு நாட்கள் கழித்து அப்பெண் திருமபவும் வீட்டுக்கு அழைக்கப்படுவாள். குறிப்பிட்ட நல்ல நாளில் வீட்டில் அல்லது மண்டபத்தில் சுமங்கலிப் பெண்கள் ஒன்று கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் புனித நீராட்டுவது பூப்புனித நீராட்டுச் சடங்காகும்.
 
==மேலும் பார்க்க==
*[[24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்]]
 
[[பகுப்பு:தமிழர் சடங்குகள்]]