சி. ஜேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: ஜேசுதாசன் (1919 - மார்ச் 6, 2002; சேனவிளை, குமரி மாவட்டம், [[தமிழ்ந...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஜேசுதாசன்''' (1919 - [[மார்ச் 6]], 2002; [[சேனவிளை]], [[குமரி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]) தமிழ் நவீன இலக்கியத்தில் ழ்ந்த பாதிப்பை செலுத்திய கல்லூரி ஆசிரியர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர். ஒரு கொத்தனாரின் மகனாக எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும், [[திருவனந்தபுரம்|திருவனந்த புரத்திலும்]] தமிழ் பட்டப்படிப்பை முடித்த பேராசிரியர், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில்முடித்தார். சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலைபார்த்தார். பின்பு திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தமிழ் துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்திவந்தார்.
நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர். ஹெப்ஸிபா ஜேசுதாசன் புத்தம் வீடு. மாநீ டாக்டர் செல்லப்பா போன்ற நாவல்களை எழுதிய நாவலாசிரியர். பேராசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியர். விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும்.
வரிசை 20:
 
பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு ' (ஆங்கிலம்: ''Count Down from Salamon'', ''Hepsipaa Jeesuthaasan'') ஒரு சாதனை படைப்பு. தமிழில் இருந்த பல ஆழமான முன்முடிவுகளை மென்மையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கிறார் பேராசிரியர். குறிப்பாக சனாதன மதம் சார்ந்த திரிபுகளை, குறுக்கல் போக்குகளை சற்றும் எதிர்மறைப் பார்வை இல்லாமல், ஆய்வுபலத்துடன், மெல்லிய திடமான குரலில் அவர் மறுப்பது மிகவும் முக்கியமானது. இக்காரணத்தினாலேயெ இப்படைப்பு இங்கு அதிகமாக கவனிக்கப்படவில்லை.
 
 
ஆயினும் பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான். நகைச்சுவை உணர்வும், நுட்பமான விமரிசனப் பாணியும், ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள். அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது. பேரா பத்மநாபன், [[அ. கா.பெருமாள்]], ராஜமார்த்தாண்டன்(விமரிசகர்,இதழாளர்), வேதசகாயகுமார் (விமரிசகர்), ப கிருஷ்ணசாமி (விமரிசகர்) ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர்.
 
 
பேராசிரியர் இசைப்பயிற்சி உடையவர். இசைச்செல்வர் லட்சுமணபிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமியிடம் இசை பயின்றவர். தமிழிசையார்வம் உண்டு. அழகிய இசைப்ப்பாடல்கள் பல எழுதியுள்ளார். அவரே நன்றாக பாடவும் செய்வார். வீணை வாசிப்பார் .
 
ஆழமான மதபக்தி உடையவர் பேராசிரியர். கிறிஸ்து அவருக்கு ஜீவனுள்ள தேவனாகவே இருந்தார். அதேசமயம் அந்த பக்தி அவரை நம் மரபின் பேரிலக்கியங்களுக்குள் போக தடையாக அமையவுமில்லை. சொல்லப்போனால் கிறிஸ்து மூலமே அவர் ராமனை மேலும் நன்றாக புரிந்து கொண்டார். அதே சமயம் ஒவ்வொரு வரியுடனும் மத ரீதியாக ஒத்துப்போனாலும் கூட தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும் கவித்துவ வெற்றி அடையவில்லை என்று சொல்லவும் தயங்கியவரல்ல. தன் குழந்தைகளுக்கு முழுக்க ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களை மத மரபை மீறி சூட்டியவர் அவர்.
 
 
பேராசிரியரின் விரிவான பேட்டி ''[[சொல்புதிது]]'' ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது..'' என்று [[அசோகமித்திரன்]] விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சி._ஜேசுதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது