சலில் சௌதுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சலில் சௌதுரி [[வங்காளம்|வங்காள]] [[இசையமைப்பாளர்]]. இந்தியாவின் பல மொழிகளின் [[திரைப்படம்|திரைப்படங்களில்]] இசையமைத்தவர். சலீல் சªதுரி வங்கத்தில் இருபத்துநான்கு பர்கானா மாவட்டத்தில் இன்று சுபாஷ் கிராம் என்றழைக்கப்படும் சிங்க்ரி போதா ஊரில் 1925 நவம்பர் 19 அன்று பிறந்தார். சலீல் சௌதுரி 1995 செப்டம்பர் ஐந்தாம்தேதி மரணமடைந்தார்.
 
==இளமைப் பருவம்==
 
தன் இளமைப் பருவத்தை சலீல் சௌதுரி அஸாமிய [[தேயிலை]]த் தோட்டங்களில் கழித்தார். அஸாமிய தேயிலைத் தோட்ட ஊழியர்களின் பாடல்களும் அஸாமிய நாடோடிப் பாடல்களும் அவரை மிகவும் பாதித்துள்ளன. இசையார்வமுள்ள அவரது தந்தை பாக், பீத்தோவன், மொஸார்ட் போன்றவர்களின் இசைத் தட்டுகளைச் சேர்த்து வைத்திருந்தார். மேலை இசையில் சலீல் சௌதுரியின் ஈடுபாடு மிக இளம் வயதிலேயே உருவான ஒன்றாகும். மேலை இசையின் தாக்கமே கருவியிசைகளின் சாத்தியக்கூறுகளைப் பற்றியும் இசையில் ஒத்திசைவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவருக்கு கற்பித்தது. சலீல் சௌதுரியின் சாதாரண [[சினிமாப் பாடல்]]கள் கூட அவற்றின் ஒத்திசைவு மிக்க அமைப்புக்காகக் கவனிக்கத் தக்கவை. [[இந்துஸ்தானி இசை]]யைத் தன் தந்தையிடமிருந்தும் அண்ணனிடமிருந்தும் கற்றார். சிறுவயதிலேயே அவர் ஒரு நாடோடி. அந்த அலைச்சல், வங்க [[பழங்குடி]] இசையையும் அவருக்குப் பழக்கப்படுத்தியது. சலீல் சௌதுரியின் இசையில், மேலை இசையும் நாட்டுப்புற இசையும் சரியான விகிதத்தில் கலந்து அதனை அழகூட்டின.
 
==அரசியல் ஆர்வம்==
பட்டப்படிப்புக்காகக்பட்டப் படிப்புக்காகக் [[கொல்கத்தா|கல்கத்தா]] வந்த சலீல் சௌதுரி அன்றைய அரசியல் அலையால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியரானார். 1946 ல் அவர் பாரதிய ஜன நாட்டிய சங்கம் என்ற அமைப்புக்காக பாடல்களை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அக்காலத்தைய சுதந்திர தாகத்தையும் உழைக்கும் மக்களின் எழுச்சியையும் பதிவு செய்ததன் மூலம் அப்பாடல்கள் வங்கக் கலாச்சாரத்தில் அழியா இடம்பெற்றன. 'பிஜார்பதி டொமர் பிஜார்' . 'ரன்னீர்', 'அபாக் ப்ரொதிபி' முதலியவை சலீல் சௌதுரியின் வார்த்தைகளிலேயே 'நம்பிக்கையின், விழிப்புணர்வின் பாடல்களாக' அமைந்தவை. தன் 20 வயதில் அவர் ஹேமந்த் குமார் பாடிய 'காயார் போது ' என்ற பாடலை இசையமைத்து வங்க இசையில் புதிய அலையை உருவாக்கினார். 'ப'ல்கீர் கான்' என்ற பெயரில் வந்த அவரது புதியவகைப் பாடல்கள் வங்க இசையின் அடுத்த கட்டத்தை உருவாக்கின
 
==இசைத் திறமை==
பட்டப்படிப்புக்காகக் [[கொல்கத்தா|கல்கத்தா]] வந்த சலீல் சௌதுரி அன்றைய அரசியல் அலையால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியரானார். 1946 ல் அவர் பாரதிய ஜன நாட்டிய சங்கம் என்ற அமைப்புக்காக பாடல்களை எழுதி இசையமைக்க ஆரம்பித்தார். அக்காலத்தைய சுதந்திர தாகத்தையும் உழைக்கும் மக்களின் எழுச்சியையும் பதிவு செய்ததன் மூலம் அப்பாடல்கள் வங்கக் கலாச்சாரத்தில் அழியா இடம்பெற்றன. 'பிஜார்பதி டொமர் பிஜார்' . 'ரன்னீர்', 'அபாக் ப்ரொதிபி' முதலியவை சலீல் சௌதுரியின் வார்த்தைகளிலேயே 'நம்பிக்கையின், விழிப்புணர்வின் பாடல்களாக' அமைந்தவை. தன் 20 வயதில் அவர் ஹேமந்த் குமார் பாடிய 'காயார் போது ' என்ற பாடலை இசையமைத்து வங்க இசையில் புதிய அலையை உருவாக்கினார். 'ப'ல்கீர் கான்' என்ற பெயரில் வந்த அவரது புதியவகைப் பாடல்கள் வங்க இசையின் அடுத்த கட்டத்தை உருவாக்கின
 
 
இசையை கோர்ப்பதில் சலீல் சௌதுரி செய்த சோதனைகளை அன்றுவரை இந்திய இசையில் எவருமே செய்தது இல்லை. பல்வேறு பாடகர்களை பலவிதமான மெட்டுக்களில் பாடச் செய்து அவற்றை இசையொருமையுடன் கோர்த்து பாடல்களை அமைக்கும் அவரது முறை அவரது திறமையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் . அவரே பாடல்களை எழுதி அவரே இசையமைத்து அவரே பின்னணி இசையை நடத்தி அனைத்து நுட்பங்களுடன் அவரே பதிவும் செய்வார். அவர் ஒரு மிகச் சிறந்த இசை நடத்துநர்.
வரிசை 13:
நூற்றுக்கணக்கான வங்க இசைப் பாடல்களை அமைத்த சலீல் சௌதுரி 41 வங்க திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது முதல் படம் பரிபர்த்தன் [மாற்றம்] 1949 ல் வந்தது. 1994ல் வந்த' மகாபாரதி 'அவரது கடைசி வங்க திரைப்படம். அவரது வங்கப்பாடல்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் அவரே பாடல்களையும் எழுதினார். பிமல் ராய் 1954ல் சலில் சௌதிரியின் கதையான 'ரிக்ஷாவாலா'வை இந்தியில் 'தோ பிகா ஜமீன்' என்றபேரில் சினிமாவாக எடுத்தபோது சலீல் சௌதுரி அதற்கு இசையமைத்து இந்தியில் நுழைந்தார். அப்படம் 1954ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறப்பு ஜூரி பரிசு பெற்றது. ஆயினும் அப்படத்தின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களான' தர்த்தி கஹே புகார்' , 'ஹரியாலா சவான்', 'ஜாரே 'போன்றவை இந்தியாவெங்கும் விரிவாகக் கவனிக்கப்பட்டன
 
==இந்தித் திரைப்படங்கள்==
அதன்பின் சலீல் சௌதுரி இந்தி திரையிசையை மாயம் போல ஆக்கிரமித்துக் கொண்டார். பிராஜ் பாபு, நௌகரி, அமானாத், டாங்கேவாலி, வாஸ், பரிவார், ஜாக்டே ரகோ, அபராதி கௌன், ஏக் காவ் கி கஹானி, லால் பத்தி, முசா•பர், ஜமானா முதலியவை பெரும் புகழ்பெற்ற படங்கள். இப்படங்களின் பாடல்கள் இன்றும் வாழ்கின்றன. 1958 ல் மதுமதி படத்தில் வந்த 11 பாடல்களும் இந்தி இசையுலகை அதிரச் செய்தபோது சலீல் சௌதுரியின் அலை உச்சத்தை அடைந்தது. ' ஜா ரெ பர்தேசி' என்றபாடல் இந்திய இசையின் மிக மிக முக்கியமான ரொமாண்டிக் பாடல் எனலாம். 'சுஹானா ச•பர் ', 'தில் தடப் தடப் கெ 'முதலியவை இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன. பரக் , உஸ்னே கஹா தா , சாயா , மாயா, காபூலிவாலா, னந்த், மேரே அப்னே, ரஜ்னிகந்தா , சோட்டி சி பாத், ஜீவன் ஜோதி, மிருகயா, னந்த் மகால் கியவை தொடர்ந்து வந்த இசை வெற்றிப்படங்கள். 1994ல் சுவாமி விவேகானந்தா படத்துக்கு இசையமைத்தபடி சலீல் சௌதுரி தன் இந்திப் பட வரிசையை முழுமை செய்தார்.
 
==மலையாளத் திரைப்படங்கள்==
 
தமிழ்நாட்டினர் சலில் சௌதிரியின் இசையை 'செம்மீன்' மலையாளப் படத்தின் பாடல்களின் வழியாகத்தான் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். 'கடலினக்கர போணோரே', 'மானச மைனே வரூ' போன்ற பாடல்கள் அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாட்டையும் வசீகரித்தவை. இன்றும் கேரளத்தைப் போலவே தமிழ்நாட்டுக் கடற்கரையிலும் பலசமயம் அப்பாடல்களின் இசையே மீனவர்களின் இசையாக அறியப்படுகிறது. பிற்பாடு கடற்கரை சார்ந்த படங்களுக்குப் போடப்பட்ட பாடல்களில் எல்லாம் அவற்றின் சாயல் உள்ளது. அவற்றை அமைத்த சலீல் சௌதுரி ஒரு வங்காளி. சலீதாவின் இசையின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள முக்கியமான தொடக்கப்புள்ளி இது. அவரது மெட்டுகள் அனைத்துமே அனேகமாக பற்பல இந்திய மொழிகளுக்கு மீண்டும் மீண்டும் போடப்பட்டவை. வங்கத்து மழைப்பாடல் மலையாள இரவு விடுதிப் பாடலாகும். இந்தியில் அது சோகப் பாடலாகலாம் . கலாச்சாரத்தின் சாரத்திலிருந்து பிறக்கும் இசைக்கு அனைத்து கலாச்சாரங்களையும் கடந்து மேலே நிற்கும் ஒரு பொது வெளியில் ஒளிவிட முடியும் என்று நிரூபித்தவர் சலீல் சௌதுரி
 
வரிசை 25:
சலீல் சௌதுரி இசையமைக்கத் தொடங்கியது 60 ஆண்டுகளுக்கு முன்பு. [[வங்காளம்]], [[இந்தி]], [[மலையாளம்]],. [[தமிழ்]], [[கன்னடம்]], [[தெலுங்கு]], [[மராத்தி]], [[குஜராத்தி]], [[ஒரியா]], [[அஸாமியம்]] என ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் சலீல் சௌதுரி இசையமைத்துள்ளார். அவர் அடிபப்டையில் ஒரு [[கவிஞர்]], [[பாடலாசிரியர்]], [[எழுத்தாளர்]], [[நாடகாசிரியர்]] அத்துடன் வங்கத்தின் முக்கியமான அரசியல் செயல்வீரரும்கூட . மார்க்ஸியராக இருந்த சலீல் சௌதுரி அரசியல் போராட்டத்தில் [[சிறைவாசம்|சிறைவாசமும்]] அனுபவித்திருக்கிறார்.
 
==கேரளாவில்==
 
இருபது வருடங்கள் வங்கத்தில் கோலோச்சிய பின்பு 1965ல் சலீல் சௌதுரி தென் எல்லையில் கேரள மண்ணுக்கு வந்தார். முதல் படம் [[செம்மீன்]]. இன்றும் மலையாள இசையை பல வெளி மாநிலத்தவர் செம்மீனின் இசைமூலமே அடையாளம் காண்கிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏழு ராத்ரிகள், ஸ்வப்னம், நீலப்பொன்மான், நெல்லு, ராகம். ராசலீலா, ப்ரதீக்ஷா, அபராதி, துலாவர்ஷம் தொடங்கி தும்போலி, கடப்புரம் வரை அவர் 23 படங்களில் 106 பாடல்களை உருவாக்கியிருக்கிறார் . மற்றும் மூன்று படங்களுக்கு அவர் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கிறார். அரவிந்தன் இயக்கிய 'வாஸ்துஹாரா' என்ற மலையாளப் படத்தில் இரு வங்கமொழிப் பாடல்களை சலீல் சௌதுரி இசையமைத்திருக்கிறார். சலீல் சௌதுரி இசையமைத்த சில படங்கள் வரவேயில்லை. பல படங்கள் மிகப்பெரிய பாக்ஸ் •பீஸ் தோல்விகள். ஆனாலும் அவரது இசை ஒளி மங்கவில்லை. பல படங்கள் இன்று அவரது பாடலாலேயே அறியப்படுகின்றன. சலீல் சௌதுரியின் புதியவகை இசைக்கு ஏற்பப் பாடலமைக்க மலையாள பாடலாசிரியர்கள் திணறினர் . பலசமயம் அபத்தமான வரிகளை எழுதினர். அவை மேலும் அபத்தமாகப் படமாக்கப்பட்டன. ஆனாலும் அப்பாடல்கள் மலையாள மனதுக்கு அன்னியமாகவில்லை. அவற்றின் இசையே அவ்வுணர்ச்சிகளை எளிய மலையாள மனதுக்குக் கூட அளித்தன. ஒரு பாடலில் வரிகளும் பின்னணி இசையும் கூடிமுயங்கி முழுமைசெய்துகொள்ளும் சித்திரம் அவரால்தான் மலையாளிக்கு அறிமுகமாயிற்று
 
வரிசை 52:
1958 ல் சலீல் சௌதுரி எழுதிய கட்டுரை ஒன்றில் 'இந்தியத் திரையிசையின் எதிர்காலம்' இந்திய திரை இசை மெட்டுகள் சார்ந்து பின்னணி இசைக்கு அதிக இடமளித்தபடி முன் நகரும் என்று சொல்லியிருந்தார். அவர் போட்ட பாதையில் [[ஆர். டி. பர்மன்]] போன்றவர்கள் முன் நகர்ந்தார்கள். மலையாள இசையில் சலீல் சௌதுரியின் உதவியாளர்களான கெ ஜெ ஜாய் , சியாம் போன்றவர்கள் முன் நகர்ந்தனர்.
 
==தமிழ்த் திரையிசையில் சவுதிரியின் பங்கு==
 
இன்றைய தமிழ் திரைப்பட இசைக்கு உண்மையான முன்னோடி சலீல் சௌதுரி என்றால் அது மிகையல்ல. அவர் குறைவாகவே தமிழில் இசையமைத்திருக்கிறார். ஆனால் இன்றைய திரையிசையின் இரு பெரும் சக்திகளான இளையராஜா , [[ஏ. ஆர். ரஹ்மான்]] ஆகிய இருவருமே சலீல் சௌதுரியின் வழிவந்தவர்கள்தான் . இளையராஜா சலீல் சௌதுரியின் குழுவில் கித்தாரும் காம்போ ஆர்கனும் வாசிப்பவராக அறிமுகமானவர். அவரிடம் சலீல் சௌதுரியின் செல்வாக்கு நேரடியானது. அவரது கணிசமான பாடல்கள் சலீல் சௌதுரியின் பாணியை அப்படியே பின்பற்றுபவை. [[நாட்டார் இசை|நாட்டாரிசையை]] மேலையிசையுடன் பிணைத்தல், பின்னணி இசையை பாடலுடன் பிரிக்கமுடியாதபடி பின்னி விரித்தல் போன்றவை அவர் சலீல் சௌதுரியிடமிருந்து கற்றுக் கொண்டவை. தான் சலீல் சௌதுரியின் ஒரு பெரும் ரசிகன் என்பதை இளையராஜா எப்போதுமே சொல்வதுண்டு. ராஜாவின் விரிவான பின்னணி இசை அமைப்பு முறைகள் [ chord progressions, choral background arrangements] மற்றும் இணை மெட்டைத் [ parallel melody/ obligato ] திறம்படப் பயன்படுத்தும் முறை ஆகியவை சலில் சௌதுரியின் பாணியிலிருந்து கற்றுகொண்டவை
 
வரிசை 58:
ஏ. ஆர். ரஹ்மானின் தந்தை ஆர். கே. சேகர் சலீல் சௌதுரியின் குழுவில் பணியாற்றியவர். அதே பாணியில் பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஹ்மானின் பல அடுக்குகளிலான பின்னணி இசை நகர்வுகள் சலீல் சௌதுரியின் பாணி தான்.
 
==தமிழ்த் திரைப்படங்களில் சவுதிரி==
 
சலீல் சௌதுரி 1971ல் உயிர் என்ற படத்துக்கு பின்னணி இசையமைத்தார். செம்மீன் இயக்குநரான [[ராமுகாரியட்]] தன் கரும்பு என்ற தமிழ் படத்துக்கு இசையமைக்க 1972 ல் சலீல் சௌதுரிவை அழைத்தார். அப்படம் பின்பு கைவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள 'திங்கள் மாலை வெண்குடை' 'கண்ணே கண்மணியே' போன்ற பாடல்கள் எழுபதுகளில் [[இலங்கை வானொலி]]யில் மிகப் பிரபலமாக இருந்தன. 1978ல் [[கமலஹாசன்]] நடித்த மதனோத்சவம் தமிழில் பருவமழை என்றபேரில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது சலீல் சௌதுரியின் 'மாடப்புறாவே வா' ' தேன்மலர் கன்னிகள் ' 'கலைமகள் மேடை நாடகம்' 'அங்கே செங்கதிர்' போன்ற அரிய மெட்டுகள் இங்கே பிரபலமடைந்தன.
 
வரிசை 68:
 
 
ஒர் இசையமைப்பாளராக சலீல் சௌதுரியின் பங்களிப்பு நுட்பமாகப் பார்த்தால் மிகமிக ஆழமான ஒன்றாகும். இந்திய இசையானது லாபனையை மையமாகக் கொண்டது. நம் காதுகள் அப்படி இசை கேட்பதற்கு பழகிப் போனவை. இது பல நூற்றாண்டுகளாக நம்மில் ஊறிய விஷயம். சலீல் சௌதுரி மேலையிசையில் ஒருவித முழுமையை அடைந்திருந்த இசையொழுங்கை [Orchestra] நம் திரையிசையில் நிறுவினார். இன்று நாம் இளையராஜாவையோ ஆர். டி. பர்மனையோ ஏ. ர்ஆர். ரஹ்மானையோ கேட்கும்போது சாதாரணமாகவே பின்னணி இசையையும் பின்னணி ஓசைகளையும் எல்லாம் இணைத்து நம் மனதில் ஒட்டுமொத்தமாக அவ்விசைக்கோலத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சலீல் சௌதுரி தான். இது மேலையிசையில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை இந்திய இசையுடன் வெற்றிகரமாகப் பிணைத்ததன் மூலம் உருவானது. இன்று உள்ள எல்லா திரையிசைப் பாடல்களும் இப்படிப்பட்ட கலப்பிசை தான். ஒரு தேசத்தின் இசை ரசனையை மாற்றியமைப்பது என்றால் அது சாதாரணமான விஷயமல்ல . தணியாத புதுமை நாட்டமும் பல்வேறுபட்ட இசை மரபுகளில் பயிற்சியும் கொண்ட சலீல் சௌதுரி போன்ற மேதைகளினாலேயே அது நிகழ முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சலில்_சௌதுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது