பயனர்:TNSEPONKASI(kanyakumari Dist)/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
முதல் முயற்சி:
டென்சிங் நார்கே தனது இருபத்தொன்றாம் வயதில் எரிக் ஷிப்டன் தலைமையிலான இமயமலையேறும் குழுவில் இடம் பிடித்தார்.
அனுமதி:
பிரிட்டிஷ் குழுவினர்:
மேஜர் சார்லஸ் வில்லி தலைமையில் ஒரு குழுவினர் எவரெஸ்ட் மலையில் ஏற வந்தனர்.அப்போது டென்சிங் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவ குழு கூறியதால் அவரும் அக்குழுவில் இணைத்துக்கொள்ள்ப்பட்டார்.டென்சிங் நார்கே தனது 39-வது வயதில் ஏழாவது முறையாக மலையேற தயாரானார்.அக்குழுவில் நியூஸிலாந்து நாட்டைச் சார்ந்த சேர் எட்மண்ட் ஹில்லாரியும் இடம் பெற்றிருந்தார்.இருவரும் பல தடைகளைத் தாண்டி சில முகாம்களைக் கடந்து 1953 மே 29 காலை 11.30 மணிக்கு எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்தனர்.மகிழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். தாம் கொண்டு சென்ற பிரிட்டிஷ் கொடி,இந்திய கொடி மற்றும் நேபாளக் கொடிகளை எவரெஸ்ட் மலை உச்சியில் பறக்கவிட்டார் டென்சிங்.தனது சட்டைப்பையில் வைத்திருந்த மிட்டாய்களை எடுத்து, சிகரத்தின் உச்சியில் பனியை இலேசாக தோண்டி அதில் வைத்து அதன்மீது தாம் கொண்ட அதீத அன்பினை வெளிப்படுத்தினார்.டென்சிங்கும் ஹில்லாரியும் சுமார் 15 நிமிடங்கள் மலை உச்சியில் நின்றதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.மறுநாள் பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழா. அன்றைய தினம் இச்செய்தி உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
நேருவின் உபசரிப்பு:
டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார்.
ஜம்லிங் டென்சிங்
ஜம்லிங் டென்சிங் மமலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.
|