[[எல்லிஸ் ஆர்.டங்கன்]](1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமாடோகிராபியில்[[சினிமாடோகிராபி]]யில் பட்டம் பெற்று,1935ல் இந்தியா வந்து சேர்ந்தார்.அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார்.கொல்கத்தாவில் [[நந்தனார்]]படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக [[சதிலீலாவதி]]படத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன்.அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார்.டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.