உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
 
உரைநடைக்குக் குறிப்பான வடிவமோ, [[எதுகை]], [[மோனை]] போன்ற அணிகளோ இருப்பதில்லை எனினும், உரைநடைகளில் [[அடுக்கு மொழி]]கள் போன்ற கவிதைப் பாங்கு காணப்படுவது உண்டு. கவிதை, உரைநடை ஆகிய இரண்டு இலக்கிய வடிவங்களையும் கலந்து உருவான ஒன்று [[வசன கவிதை]] என அழைக்கப்படுவது உண்டு. கவிதை ஓரளவு செயற்கைத்தன்மை கொண்டது. உரைநடையோ இயல்பான ஒழுங்கில் அமைவது.
 
===வரலாறு===
 
தமிழ்நாட்டில் அச்சு இயந்திரங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டன.கி.பி.1577-இல் தமிழ்மொழியில் முதல் அச்சிடும் முயற்சி நடந்தது.கிருத்துவப் பாதிரிமார்கள் தம் சமய நூல்களை அச்சிட்டு வழங்க முற்பட்டனர்.பதினேழு,பதினெட்டு நூற்றாண்டுகள் வரை அச்சு இயந்திரங்கள் கிருத்துவ பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனியினரிடத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன.இக்காலக் கட்டத்தில் ஜெர்மன் நாட்டினரான சீசன் பால்கு என்பவர் நான்காம் பிரெடரிக் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க சமயப் பணியாற்ற தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு 1709-இல் முதலாவது அச்சுக் கூடத்தையும் அதற்குரிய காகிதத் தொழிற்சாலையையும் நிறுவினார்.இதன் மூலமாக சமயப் பரப்புரையும் தமிழ் நூல்களையும் அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கியது.இவ்வாறாக தமிழில் மெல்ல உரைநடை வடிவம் வளர்ச்சியடைந்தது.தமிழ் உரைநடையின் முன்னோடியாக வீரமாமுனிவர் அறியப்படுகிறார்.இவர் எழுதிய பரமார்த்த குரு கதை எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது.19 ஆம் நூற்றாண்டில்தான் அச்சு இயந்திரங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் உரிமைப் பெற்றனர்.
 
{{இலக்கிய வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது