எல்லீஸ் மற்றும் மக்கன்ஸிமெக்கன்ஸி என்கிற இரு ஆங்கிலேய அதிகாரிகள் சென்னைக் கல்விச் சங்கத்தை நிறுவினர்.தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிட்டு வெளியிடுவதை இச்சங்கம் தலையாயப் பணியாகக் கொண்டிருந்தது.முத்துசாமிப் பிள்ளை,தாண்டவராய முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான தமிழ் ஆசிரியர்கள் இச்சங்கத்தில் தொண்டாற்றினர்.வீரமாமுனிவரின் தமிழ் அகராதியையும் ஏனைய நூல்களையும் முத்துசாமிப் பிள்ளை அச்சிட்டு வழங்கினார். தாண்டவராய முதலியார் பஞ்சதந்திர கதை(1825)யை மொழிபெயர்த்தும் தமிழகத்தில் வழங்கிவந்த கதைகளைத் தொகுத்து கதாமஞ்சரி(1826) என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.இச்சங்கம் மூலமாக பல்வேறு உரைநடை நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின.