பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
History manipulation removed |
No edit summary |
||
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:பாரி முல்லைக்குத் தேரீதல் (படிமம்).JPG|thumb|பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி.]]
'''வேள்பாரி(பள்ளி வேந்தன் பாரி வள்ளல்)''' [[பறம்பு மலை]]யை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]]க் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது 'பிரான்மலை' என்று அழைகப்படுகிறது.. அப்போதைய [[பாண்டியர்|பாண்டிய]] அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்பதாகும். இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்னும் புராணக்கதையும் உண்டு. பிரான்மலை [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] [[திருப்பத்தூர்]], [[காரைக்குடி]] திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்ததன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
இவர் [[கடையெழு வள்ளல்கள்|கடையேழு வள்ளல்களில்]] ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் [[கபிலர்]] பாரியின் நண்பர். [[திருச்சி]]யிலிருந்து [[மதுரை]] செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது [[திருவாதவூர்]]. அவ்வூரில் பிறந்தவர் [[கபிலர்]] எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; 'பொய்யாநாவிற்கபிலர்' என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.
[[படிமம்:பறம்புமலை.JPG|thumb|பறம்புமலை]]
வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த [[முல்லை மலர்|முல்லைக்கொடிக்குத்]] தான் ஏறி வந்த [[தேர்|தேரினையே]] ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற [[சுந்தரர்]] -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் - பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் [[புறநானூறு]] என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.
|