சகுந்தலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 32:
== துஷ்யந்தனுடன் சந்திப்பு ==
துஷ்யந்த அரசர் தன்னுடைய படையினருடன் காட்டில் பயணித்த போது சகுந்தலாவை சந்திக்கிறார். தன்னுடைய அம்பினால் காயமடைந்த மானைத் தேடி ஆசிரமத்திற்கு வரும் அவர், சகுந்தலாவின் செல்லப்பிராணியாக இருக்கும் மானிற்கு மருந்திடுவதை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறாள் சகுந்தலை. அவர் அந்த மானைக் காயப்படுத்தியற்காக பணிவோடு மன்னி்ப்பு கேட்டுக்கொண்டு ஆசிரமத்தில் கொஞ்ச நாட்களை செலவிடுகிறார். அவர்கள் காதல் வயப்படுகின்றனர் என்பதோடு துஷ்யந்தன் சகுந்தலாவை ஆசிரமத்திலேயே [[களவு மணம்|காந்தர்வ திருமணம்]] செய்துகொள்கிறார். தலைநகரத்தில் உருவான கலகங்களின் காரணமாக சில நாட்களில் சென்றுவிடும் துஷ்யந்தன் தங்களுடைய காதலின் அடையாளச் சின்னமாக சகுந்தலாவிடம் ஒரு அரச மோதிரத்தைக் கொடுத்து, தான் விரைவிலேயே திரும்பி வருவதாகச் சத்தியம் செய்துவிட்டுச் செல்கிறார்.
|