ஹரிஷ் ராகவேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==வாழ்க்கை வரலாறு==
ஹரிசின் இயற்பெயர் ஹரிஷ் ராம் ஸ்ரீனிவாசாகும். ஒளிப்படக் கலைஞர் பி.வி.ராகவேந்திரனின் மகனாவார். சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. அவரது முதல் பாடல் தெலுங்கு படமொன்றிற்கு அமைந்தது. அவர் கல்லூரியின் முதலாண்டில் இருக்கும்போது [[அரசியல்]] என்ற திரைப்படத்திற்கு "வா சகி" என்ற பாடல் பாடி வெற்றி யடைந்தது. ஆயினும் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர பல வாய்ப்புகளைத் துறந்தார்.[[விவேகானந்தா கல்லூரி]]யில்கல்லூரியில் வணிகவியல் பட்டமும் பொதுத் தொடர்பு மற்றும் தாளியலில் மேற்படிப்பும் முடித்தார்.மென்பொருள் பொறியியலிலும் கல்வி கற்றார்.
 
மீண்டும் திரைப்பட இசையில் ஈடுபாடு கொண்டு [[இளையராஜா]] இசையில் [[பாரதி (திரைப்படம்)|பாரதி]] திரைப்படத்தில் "நிற்பதுவே நடப்பதுவே" என்ற பாடலைப் பாடினார்.இப்பாடல் பெருவெற்றி யடைந்ததுடன் மாநில அரசின் விருதினையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இந்நேரத்தில் தான் தனது பெயரை ஹரிஷ் ராகவேந்திரா என்று மாற்றிக் கொண்டார். தொடர்ந்து [[தமிழ்]],[[தெலுங்கு]],[[மலையாளம்]], [[கன்னடம்]] மற்றும் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹரிஷ்_ராகவேந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது