கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி [[ஆர்யா]]. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளைத் தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.
இந்தியா சுதந்திரம் பெரும்பெறும் சமயத்தில் சென்னை ஆளுனராகஆளுநராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு ஆட்டுக்குட்டியைஆட்டுக்குட்டியைக் காப்பாற்றுவதைகாப்பாற்றுவதைக் காண்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, ஏமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியைதாலியைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வரும் ஏமி, ஆர்யா இத்தனை ஆண்டுகளாகஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரில் பல நற்பணிகள் செய்து வருகிறார் என்றும் அறிகிறார். இதைத் தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துறக்கிறார்.