மா சே துங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
சீன முதலாளித்துவ பொருளாதார முறை,பொதுவுடைமை ஆக்கப்பட்டது.அதேபோல்,அரசியல் ஆட்சி முறை பொது ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக்கொண்டு நிறுவப் பெற்றது.தொன்றுதொட்டு சீன மக்கள் ஆழ்ந்த குடும்பப் பற்று மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.மா-சே-துங் இதனைத் தீவிர நாட்டுப் பற்று உணர்வாக மாற்றிக் காட்டினார்.மேலும்,கன்ஃபூசிய கொள்கைகளுக்கு எதிராகச் மாவோ உருவாக்கிய சீன அரசு தீவிரமான பரப்புரையினை முடுக்கிவிட்டதற்கு பலன் இல்லாமலில்லை.
 
சீனப் பொதுவுடைமை அரசின் கொள்கைகளை மா-சே-துங் தன்னிச்சையாகச் செயல்படுத்த முனைந்ததில்லை.சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் நிர்வகித்தது போல்,ஒரு தனி மனித ஆதிக்கத்தை மா-சே-துங் நிறுவிட எண்ணியதில்லை.இருந்தபோதிலும்,1949 முதல் 1976 முடிய ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள்,அதாவது மா-சே-துங் இறப்பு வரையிலும்,சீன அரசின் முக்கியத் தலைவராகவே இருந்துவந்தார்.சீனாவில் 1950-களில் தொடங்கப் பெற்ற, "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" என்ற இயக்கத்திற்கு மூல முதற்காரணமாகக் கருதப்படுவர் மா-சே-துங் ஆவார்.<ref>{{citekoodal.com webமா - சே - துங் (1893 - 1976) | url=http://www.koodal.com/ | accessdate=மே 25, 2017}}</ref> பின்னாட்களில் இந்த இயக்கம் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது.அதுபோல, 1960-களில் மா-சே-துங் தீவிரமாக ஆதரித்த மற்றொரு திட்டம் "மாபெரும் தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி" என்பதாகும்.இதனை ஏனைய தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.இந்தத் திட்டத்தால் இருதரப்பினரிடையே உள்நாட்டுப் போர் மூளக் காரணமாயிற்று.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மா_சே_துங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது