'''காரல் கிரவுல்''' (Karl Graul பிப்பிரவரி 6, 1814--நவம்பர் 10, 18141864<ref name=BDCM>Biographical Dictionary of Christian Missions p. 257</ref>) என்பவர் [[செருமனி]] நாட்டைச் சேர்ந்த கிறித்தவப் பாதிரியார் ஆவார். காரல் கிரவுல் 1849 முதல் 1853 வரை தமிழகத்தில் மறைப் பணியும் தமிழ்ப் பணியும் செய்தார். [[திருக்குறள்|திருக்குறளைத்]] தம் தாய் மொழியான செருமனியில் மொழியாக்கம் செய்திருந்தார். அவர் இறந்து சில நாள்களுக்குப் பின் "DER KURAL DES THIRUVALLUVER" என்னும் பெயரில் திருக்குறளின் செருமன் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது.