இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 உடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 *18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன.
(உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா க் + இ = கி க்+ஈ = கீ க் + உ = கு)
'''2. ஆய்தம் (தனி நிலை எழுத்து )'''
 
தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து ஒன்றும் ( ஃ ) தமிழில் உண்டு இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்கு பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாக கொண்டு வரும். ( உதாரணம் : அஃது, இஃது, எஃது )
'''3. உயிரளபெடை'''
 
உயிரளபெடை என்பது உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது ஆகும் .
( உயிர் + அளபெடை . அளபெடை என்றால் , நீண்டு ஒலித்தல் என்று பொருள் ).
உயிரெழுத்துகளில் , நெட்டெழுத்துகள் ஏழும் , தமக்குரிய இரண்டு மாத்திரைகளில் (குறில் = 1 மாத்திரை , நெடில் = 2 மாத்திரை) இருந்து நீண்டு ஒலிக்கும் நிகழ்வு , உயிரளபெடை ஆகும் .
முதலெழுத்து , இடையெழுத்து , கடையெழுத்து என்று , மூவகை இடங்களில் , இவை நடைபெறும் .
எடுத்துக்காட்டு :
1. ஓஒதல் வேண்டும் .
இதில் ,’ ஓதல் ‘ என்று வந்திருக்கவேண்டும் . இவ்விடத்தில் ‘ஓ’ எனும் உயிர்நெடில் எழுத்து , தனக்குரிய இனவெழுத்தான ‘ஒ’ என்று தொடர்ந்து வந்து அளபெடுத்துள்ளது . மேலும் , வார்த்தையின் தொடக்கத்திலேயே அளபெடுத்துள்ளதால் , இது முதல் எழுத்துஅளபெடுக்கும் வகையறா ஆகும் .
2. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சான்றாய்
இதில் , வார்த்தையின் நடுவில் ‘தூ (த் + ஊ)’ எனும் உயிர்மெய் நெடில் , தன் இனவெழுத்தான ‘உ’ வுடன் இணைந்து அளபெடுத்து வருகிறது . வார்த்தைகளின் நடுவில் அளபெடுத்து வரும்காரணத்தினால் , இவை இடையெழுத்து அளபெடுத்துவரும் வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும் . இதேபோல் , கடையெழுத்து அளபெடுத்து வருவதையும் எ. காவுடன் விளக்கலாம் .
 
உயிரளபெடையானது , மூன்று வகைப்படும் .
 
1. இசைநிறையளபெடை செய்யுளின் ஓசை குறையுமிடத்து , குறைந்த ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுத்தல் . உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்
2. இன்னிசையளபெடை ஓசை குறையவில்லை எனினும் , இனிமைக்காக அளபெடுத்தல். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்சார்வாய்
3. சொல்லிசையளபெடை பெயர்ச்சொல்லை , வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தல்.
 
'''4. ஒற்றளபெடை'''
ஒற்றெழுத்து , தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து , நீண்டு ஒலித்தல் .
 
'''5. குற்றியலுகரம்'''
 
ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘உ’ கரம் , அரைமாத்திரயாக ஒலிப்பது , குற்றியலுகரம் எனப்படும் .
க , ச , ட , த , ப , ற எனும் வல்லின எழுத்துகளுடன் , ‘உ’கரம் இணைந்து , கு , சு , டு , து, பு, று எனும் வார்த்தைகள் தோன்றும் . இந்த எழுத்துகள் , தனிநெடில் உடனோ ,பல எழுத்துகளை தொடர்ந்து , கடைசியில் வந்தாலோ , அவ்வார்த்தையில் வரும் ‘உ’கரம் , அரைமாத்திரயளவே ஒலிக்கும் .
எ.கா – 1 .தனிநெடிலுடன் வரும் போது ,
காசு – இவ்வார்த்தைச்சொல்லி பார்த்தால் , காஸ்+உ என்றே நாம் உச்சரிப்போம் .’சு’க்கு பதில் , ‘உ’ என்றுதான் கடைசியில் வரும் .
எ.கா – 2 . பல எழுத்துகள் சேர்ந்து வருதல் .
பந்து - இதில் வரும் வார்த்தையை சொல்லிப்பாருங்கள் . ‘பந்த்’ + உ என்றே சொல்லுவோம் . ‘து’க்கு பதில் , கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே வரும் . இவ்வாறு வருதலே , குற்றியலுகரம் .
 
குற்றியலுகரம் , ஆறு வகைப்படும் .
 
எ.கா வகை
நாடு நெடில்தொடர் குற்றியலுகரம்
எஃகு ஆய்ததொடர் ‘’
வரகு உயிர்த்தொடர்
பத்து வன்தொடர்
பந்து மென்தொடர்
மார்பு இடைத்தொடர்
 
'''6. குற்றியலிகரம்'''
 
ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘இ’கரம் , அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
 
எ. கா
 
நாடு + யாது = நா(ட் + உ) + யாது = நாடியாது
இவ்விடத்தில் , வரும் ‘உ’கரம் , முதலில் வரும் ‘ய’வின் காரணமாக , ‘இ’கரமாக மாறியுள்ளது . அவ்வாறு மாறினாலும் , அதன் மாத்திரை , அரை மாத்திரையே ஆகும் . செம குழப்பமா இருக்கா ? குற்றியலுகரம் , இகரமாக திரிவது தான் குற்றியலிகரம் .
 
 
'''7. ஐகாரக்குறுக்கம்'''
 
ஐ என்பதற்கு இரண்டு மாத்திரை . அது , ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே , ஐகாரக்குறுக்கம் . என்னடா இது ? ஒன்றரையாவும் குறையுது , ஒன்னாவும் குறையுதுனு பாக்குரிங்களா ?
 
ரொம்ப சிம்பிள் . ஒரு வார்த்தையின் முதல் சொல்லாக ‘ஐ’ வந்தால் , ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்ம.
எ.கா – ஐந்து . இந்த இடத்துல , ‘ஐ’ங்ற சொல்ல , இரண்டு விநாடி நம்மால சொல்ல முடியுமா ? முடியாது . சும்மா , நீங்களே சொல்லிப்பாருங்க
வார்த்தையின் நடுவே வரும்போது , ஒரு மாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
எ.கா - வளையல் . இத சொல்லும்போது , ‘ஐ’ங்றது , அடங்கிப்போயிருக்கும் .
 
'''8. ஔகார குறுக்கம்'''
இது முதல் சொல்லாகத்தான் , ஒரு வார்த்தையில் வரும் . அப்படி வரும் போது , இரண்டு மாத்திரையிலிருந்து , ஒன்றரையாக குறைந்து ஒலிக்கும்
 
'''9. மகரக்குறுக்கம்'''
 
‘ம்’ ங்ற சொல் , அதன் அரைமாத்திரையிலிருந்து , கால் மாத்திரையாக குறைந்து ஒலித்தலே , மகரக்குறுக்கம் .
 
'''10 .ஆய்த குறுக்கம்'''
 
‘ஃ’ ஆய்த எழுத்து , தம்க்குரிய அரை மாத்திரையிலிந்து , கால் மாத்திரையாக ஒலித்தல் .
 
எ.கா
கல் + தீது = கஃறீது
இதை சொல்லிப்பாருங்கள் .அக்கு என்று தனியாக இருக்கும் போது அழைக்கப்படும் ஆயுத எழுத்து , மேலே உள்ள வார்த்தையுடன் படிக்கும்போது ஹ என்று SILENT ஆக இருக்கும் . குறுக்கம் என்றாலே , சுருக்குதல் என்று பொருள் .
 
 
"https://ta.wikipedia.org/wiki/இலக்கணம்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது