அசை (ஒலியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 96:
ஆடொலியின் மற்றொருவகை அடியொலி ஆகும். இதனை வருடொலி என்றும் சொல்வார்கள். ஆடும் பகுதி ஓரே ஒரு அடியோடு நின்றுவிடுமாயின் அது அடியொலி தமிழில் ‘ர்’ ‘ற்’ என இரண்டு ஒலிகள் உள்ளன. இதில் ‘ரகரம்’ அடியொலியாக வருகிறது.
 
== '''உயிரொலிகள் :''' ==
 
நுரையீரலிருந்து வெளிவரும் காற்று மற்ற ஒலி உறுப்புக்களால் தங்கு தடையின்றி வெளிவரும்பொழுது எழும் ஒலிகளை உயிரொலிகள் என்கிறோம்.
வரிசை 119:
எ.கா. : இலை -> எலை, இடம் -> எடம், உலகம் -> ஒலகம், இழை -> எலை, உலக்கை -> ஒலக்கை
 
'''விறைப்புயிர்கள் :'''
 
பேச்சு உறுப்புகளின்தசையில் ஒலிக்கும் போது ஏற்படும்விறைப்பின் தன்மையினால் விறைப்புயிர்கள் உண்டாகின்றன. தமிழில் உள்ள நெடில் உயிர்களை விறைப்புயிர்கள் என்கிறோம்.
 
'''ஈரூயிர் :'''
 
தமிழில் ஐ, ஔ என்ற இரண்டு உயிரொலிகள் உள்ளன. இவை இரு உயிர்களின் சேர்க்கையில் தோன்றிய காரணத்தால் ஈருயிர் (Depthongs) எனப்படும். இரண்டு உயிராலிகளை ஓரே ஒலிகளாக இணைத்து ஓர் ஒலியனாக வழங்கும்போது அதனை ஈருயிர் என்கின்றனர். தமிழல் ஐ, ஔ ஈருயிர்களாகும்.
அ + இ = ஐ என்னும் ஒலியனும்
அ + உ = ஔ என்னும் ஒலியனும் தோன்றியுள்ளன.
 
'''அரை உயிர் :'''
 
தமிழ் இலக்கண அறிஞர்கள் கூறுகின்ற உடம்படு மெய்யை ஒலி நூலார் அரை உயிர்கள் (SemiVowels) என்கின்றனர். டப, கர, வகரம் ஆகியவை அரைஉயிர்கள் ஆகும். உயிரொலிகளின் பிறப்பின் தன்மையை இவகைள் பெறுகின்றன. ஆனால் மெய்யொலிகளுக்குரிய ஒலிப்பிடத்தைப் பெறுகின்றன. இவை உயிரொலிகளை இணைக்கும் பாலமாக இவை அமைகின்றன. வாழை + இலை = வாழையிலை
 
'''உயிர் நிழல் :'''
 
(அளபெடை) உயிரொலி இரண்டு மாத்திரைகளை அதிக அளவாகப் பெறும் இரு மாத்திரைக்கு அதிகமாக உயிரொலிகள் அளபெடுத்தும் வந்தால் அதனை உயிரளபெடை என்கிறோம்.
 
'''மூவளவு இசைத்தல் :'''
 
ஆய்தம் : தமிழ்மொழியில் உயிராலியிலும் சேராமல், மெய்யொலியிலும் சேராமல் ஆய்தம் என்ற ஓர் ஒலி உள்ளது. தொல்காப்பியர் இதனை சார்பொலி என்கிறார் இது தனி ஒலியாக மொழியிலில் வருவது இல்லை. எதாவது ஒரு ஒலியின் திரிபாக வருகிறது.
முள் + தீது = முட்டீது
கள் + தீது = கட்றீது
இதனை ஆராய்ந்த மாணிக்க நாயக்கர் ஆங்கில ஒலியின் உரசொலியாகக் கருதுகிறார்.
 
'''(i) இசையொலி :'''
 
குரல் வளையில் உள்ள குரல் நார்களின் (அ) தசை நார்களின் வழியாக காற்று வªளியாகும் போது குரல் நார்களில் காற்று பட்டும் படாமலும் வெளியாகும். இநநிலையில் ஒலி அசைவுகள் தோன்றுகின்ற இவ்வசைவுகளின்போது உண்டாகும் ஒலிகளை இசைஒலிகள் என்கிறோம்.
எ.கா. : A B G D - இது பெரும்பாலும் அடைப்பொலியாக வரும்.
 
'''(ii ) இசைஇல் ஒலி :'''
 
குரல்வளையில் நெகிழும் தன்மையுள்ள இரண்டு தசைநார்கள் உள்ளன. காற்றுகுரல் நார்களில் எந்தவிதமான அசைவும் ஏற்படாமல் ஒலி தோன்றுமானால் அதை இசை இல் ஒலி என்கிறோம்.
மாற்றொலி : (Allophone) தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவற்றை மொழியியலாளர் மாற்றொலி வகையைச் சார்ந்தவையாக கருதுகின்றனர். இம்மூன்று எழுத்துக்களும் முதலெழுத்துக்கள்ன சிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகக் கருதுகின்றன.
 
'''ஒலி எழுதும் முறை :'''
 
(Phonetic Transcription) பேச்சொலிகள் எல்லாவற்றுக்கும் எழுத்து வடிவம் இல்லை. பேச்சொலிகள் அனைத்துக்கும் வரிவடிவம் தருவதனை ஒலி எழுதும் முறை என்கிறோம். உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் காணப்படும். எல்லா ஒலிகளையும் தொகுத்து ஒரு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்அட்டவணையை உலக ஒலி ஆய்வுக்கழகம் தயாரித்துள்ளது.
 
== உசாத்துணை நூல்கள் ==
1. மொழியில் வரலாறு
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அசை_(ஒலியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது