ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Thiyagu Ganesh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2319794 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 32:
ஜியோவன்னி சான்டி ஒவியர் மட்டும் அல்லாது ஒரு [[கவிஞர்|கவிஞராகவும்]] இருந்தார். இவர் பெடரிகோவின் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதியுள்ளார். இவர் டியூக்கின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ராபியேல் பிறப்பதற்கு முதல் ஆண்டில் பெடரிகோ, காலமானபோது ஆட்சியாளராக அவரது மகனான ''கிடோபால்டோ டா மொன்டெபெல்ட்டோ'' பதவியேற்றார். அவர் [[மந்துவா]]வின் (Mantua) ஆட்சியாளரின் மகளை மணம் முடித்தார். மந்துவாவின் அவை [[இசை]], [[காட்சிக் கலை]]கள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. இத்தகைய பின்னணி கொண்ட சூழலில் வளர்ந்த ராபியேலுக்கு சிறப்பான பழக்க வழக்கங்களும், சமுதாயத் திறமைகளும் வாய்க்கப் பெற்றன. இக் காலத்துக்குச் சற்றுப் பின்னர் உர்பினோவின் ஆட்சிச் சபை [[பால்டாசாரே காஸ்டிக்லியன்]] எழுதிய நூலில் கூறப்பட்ட இத்தாலிய மனித நோக்கு சார்ந்த ஒழுக்கங்களுக்கான ஒரு மாதிரி அவையாகத் திகழ்ந்தது. காஸ்டிக்லியன் 1504 ஆம் ஆண்டில் உர்பினோவில் குடியேறினார். அவ்வேளையில் ராபியேல் உர்பினோவை விட்டுச் சென்றுவிட்டார் எனினும் அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தார். இதனால் காஸ்டிக்லியனும், ராபியேலும் நண்பர்களாயினர். ஆட்சிச் சபைக்கு அடிக்கடி வருபவர்களும், பிற்காலத்தில் கர்தினால்களாக ஆனவர்களுமான பியெட்ரோ பிபியேனா, பியெட்ரோ பெம்போ ஆகியோரும் ராபியேலுக்கு நண்பர்கள் ஆயினர். ராபியேல் ரோமில் தங்கியிருந்த காலத்தில் எழுத்தாளர்களாகப் பிரபலமாகிக் கொண்டு இருந்த இவர்களும் ரோமிலேயே இருந்தனர். மேல் தட்டு மக்களுடன் கலந்து பழகுவதில் ராபியேலுக்கு எவ்வித பிரச்சினையும் இருந்ததில்லை. இதனாலேயே இவருக்கு இவரது தொழிலில் எதையும் இலகுவாக அடையக்கூடியதாக இருந்தது. எனினும் ராபியேல் மனித நோக்கு சார்ந்த கல்வியைப் பெற்றிருக்கவில்லை.
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் பணி ==
[[படிமம்:Raphael colonna 01.jpg|thumb|பதின்ம வயதில் ராபேலே வரைந்து கொண்ட சுய ஓவியம்]]
ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார்.
1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் மஜியா இறந்தார்.பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார்.பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்பு தாயிற்காக தந்தையின் பணிகளை கவனித்து வந்தார். வசாரியின் கூற்றுப்படி ராபியேல் அவரது தந்தைக்கு மிகவும் பேருதவியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.<ref>Vasari, at the start of the ''Life''. Jones & Penny:5</ref>. அவரது பதின்ம வயதிலேயே தன் சுயப்படத்தை வரைந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்<ref>[[Ashmolean Museum]] {{cite web |url=http://z.about.com/d/arthistory/1/0/W/O/raphael_colonna_01.jpg |title=Image |author= |work= |publisher=z.about.com |accessdate=}}</ref>. அப்போது ராபேலுக்கு , பவுலோயுசெல்லா எனும் முன்னால் நீதிமன்ற ஓவியரின் நட்பு கிடைத்தது.பின் 1502 இல் சியன்னாவிற்கு சென்றார்.சியன்னா கத்ரீட்டலில் உள்ள நூலகத்தில் கார்ட்டூன் மற்றும் ஓவியங்களை வரைந்தார். இதுவே ராபேலின் ஓவிய வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.
== இத்தாலியில் ராபேல் ==
ரபேல் வடக்கு இத்தாலியில் உள்ள பல்வேறு மையங்களில் வேலை செய்தார்.ஆனால் அவர் அங்கு ஒரு "நாடோடி" வாழ்க்கை தான் மேற்கொண்டார். 1504-8 வரை அவர் இத்தாலி,ஃப்ளாரென்சில் வசித்தார்.ஆனால் ப்ளோரன்ஸில் அவர் வாழ்ந்த காலம் பற்றி பாரம்பரிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அவர் அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் என குறிப்புகள் கூறுகின்றது.
== ரோமில் ராபேல் ==
1508 இல் ராபேல் தனது வாழ்நாள் முழுவதும் வசித்த ரோமிற்குச் சென்றார். புதிய போப் இரண்டாம் ஜுலியஸ் அழைக்க போப்பின் வாட்டிகன் அரண்மனையில் உள்ள நூலகத்தில் சுவரொவியம் வரைந்தார். இதற்கு முன் அவர் இது போன்ற பெரிய குழுக்களில் பணியாற்றியது இல்லை. அதனால் அந்தச் சந்தர்பத்தை மிக பெரிய வாய்ப்பாக அவர் கருதினார்.ஆனால் அவர் அங்கு ஒரு ஓவியம் மட்டுமே வரைந்தார்.பின் சிஸ்டன் சேப்பலில் கோபுர ஓவியங்களையும் வரைந்தார்.
==ஓவியத்தில் வரையப் பயன்படுத்திய பொருட்கள்==
ராபியேலின் பல ஓவியங்கள் மரப்பலகைகளின் மீதே வரையப்பட்டுள்ளது (ஓவியம்;மடோனா ஆப் த பிங்).ஆனால் அவர் ஓவியம் தீட்ட துணிகளையும் பயன்படுத்தியுள்ளார் (ஓவியம்:சிஸ்டைன் மடோனா), மேலும் காயக்கூடிய எண்ணெய் வகைகளான ஆளிக்கொட்டை எண்ணெய் மற்றும் வாதுமை எண்ணெய்களைக் கொண்டும் வரைந்துள்ளார். அவருடைய வண்ணத்தட்டு மதிப்பு வாய்ந்த தனித்துவமான வண்ணக் கலவைகளை உருவாக்கி வரைந்துள்ளார். அவரது பல ஓவியங்களில் (ஓவியம்: அன்சிடேய் மடோனா) சிறப்பு வகை மரங்களையும் பயன்படத்தியுள்ளார். மேலும் தனது ஓவயிங்களில் தங்க உலோகப் பொடி கொண்டும் பிசுமத்தைக் கொண்டும் வண்ணம் தீட்டியுள்ளார்<ref>Roy, A., Spring, M., Plazzotta, C. ‘Raphael’s Early Work in the National Gallery: Paintings before Rome‘. ''National Gallery Technical Bulletin'' Vol 25, pp 4–35</ref><ref>[http://colourlex.com/paintings/paintings-painter/italian-painters/ Italian painters] at ColourLex</ref>.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1483 பிறப்புகள்]]
[[பகுப்பு:இத்தாலிய ஓவியர்கள்]]
[[பகுப்பு:1520 இறப்புகள்]]
|