மார்பகப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
“மார்பக புற்றுநோய் இந்தியாவில் தான் அதிகமாக ஏற்படுகிறது. ஏனெனில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இந்திய பெண்களிடம் அறவே இல்லை. மார்பகங் களில் உருவாக்கும் புற்றுநோய் கட்டிகளை சூடுகட்டி, வேர்குரு... என தவறாக கருது கிறார்கள். அதற்காக தான் விமான நிலையங்களில் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பலூன்களை பறக்கவிட்டு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதோடு, தெரு கூத்து, போக்குவரத்து சிக்னல் களில் மைம் நாடகங்கள் என பலவற்றை அரங்கேற்றி வருகிறோம். சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில், அதிலும் குறிப்பாக சென்னையில் மார்பக புற்றுநோய் அதிகமாக பரவி வருகிறது. இதில் ஆண்களும், பெண்களும் சரி சமமாக பாதிக்கப்படுகிறார்கள். அதனால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்” என்பவர் ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ என்ற சமூக அமைப்பின் துணை தலைவராக இருக்கிறார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இவர்களது முதன்மை பணி.
“சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும், மற்ற கிராமங்களிலும் அமைப்பின் மூலம் மருத்துவ முகாம்களை நடத்துகிறோம். அதில் மார்பக புற்றுநோயின் தாக்கம், எப்படி உருவாகிறது, எப்படிப்பட்ட உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது... போன்றவற்றை வீடியோ காட்சிகளாகவும், புகைப்பட தொகுப்புகளாகவும் காண்பிக்கிறோம். இதுமட்டுமில்லாமல் கல்லூரிகளுக்கு சென்று கல்லூரி மாணவிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். தற்போது இந்த பட்டியலில் கல்லூரி மாணவர்களையும் இணைத்திருக்கிறோம். அவர்களுக்கு இந்த தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. இருப்பினும் நிலவரத்தை புரிந்து கொள்கிறார்கள். வாழ்க்கை முறையும், தட்பவெப்ப சூழ்நிலையும் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பதால்... சிறு கட்டியாக இருந்தாலும்... அதை சோதித்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்ற கருத்துடன் முடிக்கிறார்.
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்பகப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது