சித்தர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kanags பக்கம் சித்தர்கள் ஐ சித்தர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் |
No edit summary |
||
வரிசை 1:
சித்தர்கள் எழுதிய பாடல்கள் தமிழ் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே கூறலாம். சித்தர்கள் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. வாழ்வியல் தத்துவம்,மருத்துவம்,வானியல்,இரசவாதம், என்று பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளனர்.
== அறியாமை ==
மனிதன் புறவுலகின் பூசல்களில் சிக்குண்டு மூட நம்பிக்கை என்னும் புதைகுழியில் வீழ்ந்து கிடக்கின்றான்.தன் மனத்தினுள் உணர வேண்டிய இறைவனை நம்பாமல் வெற்று ஆரவாரங்களை உண்மை என நம்புகின்றான். இதனையே திருமூலர்
நட்ட கல்லை சுற்றிவந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணுக்கு சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
என்று மிக அழகாகப் பாடியுள்ளார்.
=== மனத்தை அடக்குதல் ===
எப்பேர்ப் பட்டவர்க்கும் மனத்தை அடக்குதலென்பது மந்திரத்தாலும் முடியா செயல். மனம் ஒரு குரங்கு , கடைத் தெருவில் சுற்றும் நாய், அது செல்லா இடமில்லை. தாயுமானவரே
கொள்ளித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்
கள்ளமனம் துள்ளுவ தென்கண்டாய் பராபரமே
என்று பாடுகின்றார்.
==== பட்டினத்தார் ====
பட்டினத்தார் தன் தாயார் இறந்த பொழுது பாடிய இரங்கற் பாடல்கள் கேட்டால் கல்லும் கசிந்துருகும் தன்மை வாய்ந்தன.
[[ பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|