இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது |
|||
வரிசை 29:
==கல்வியும் குடும்பமும்==
[[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பிராமண மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார்.
தேர்ந்த மொழி புலமை உள்ளவர் ரெட்டைமலை சீனிவாசன். அண்ணல் காந்தியடிகளுக்கும், மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கும் உள்ள நட்பு அனைவரும் அறிந்ததே. இதில் அதிகம் வெளியே தெரியாத, அல்லது பதிவு செய்யப்படாத முக்கிய விடயம் ஒன்று உள்ளது. ஒருமுறை காந்தி, லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில், ‘தம்மை துன்புறுத்துபுவரிடமும் தண்டிக்காமல் மன்னிக்கும் குணம் குறித்து நீங்கள் எழுதிய வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது’ என்று சிலாகித்தார். அதற்குப் பதிலளித்த லியோ டால்ஸ்டாய், ‘இந்தப் பெருமையெல்லாம் உங்கள் நாட்டில் உள்ள சிறப்புமிக்க தமிழ் மொழியின் திருக்குறளையேச் சாரும். அதுவே மானுடத்தை எனக்குள் மெருகேற்றியது’ என்று ‘இன்னா செய்தாரை’ குறளையும் எழுதி அனுப்புகிறார்.
அதில், உருகிய அண்ணல் காந்தி, ‘ஆங்கிலத்தில் படித்தபோதே திருக்குறள் சிறப்பானதாக இருக்கிறதே... அதன் மூலமொழியான தமிழ் மொழியில் பயின்றால் எந்தளவு சுக அனுபவமாக இருக்கும்’ என்று தமிழ் படிக்க ஆர்வப்படுகிறார். அவரின் ஆர்வத்துக்கு ஆசிரியராக இருந்து திருக்குறளைப் போதித்து, காந்திக்குத் தமிழில் கையொப்பமும் இடக் கற்றுத் தந்தவரே ‘ரெட்டைமலை சீனிவாசன்!'
==பறையர் மகாசன சபை==
1891-இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை 'பறையன்' என்ற திங்கள் இதழை நடத்தினார். இதே காலகட்டத்தில்தான் 1.12.1891-இல் பண்டித [[அயோத்திதாசர்]] [[நீலகிரி]]யில் [[திராவிடர்|திராவிட]] மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி [[பிரித்தானிய இந்தியா|ஆங்கில அரசுக்கும்]], [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக் கட்சிக்கும்]] அனுப்பிவைத்தார். 1892-இல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார்.
'சூத்திரரைத் தொட்டால் தீட்டு, பஞ்சமரைப் பார்த்தாலே தீட்டு' என கொடூரமாக வெளிப்பட்ட சாதியத்துக்கு எதிராக, தமது எழுத்துக்களையே ஆயுதமாக ஏந்தினார். எந்த சாதியின் பெயரால் மக்களை தாழ்த்தினார்களோ, அதே பெயரில் பத்திரிகை தொடங்கி கலகக்காரராக மிளிர்ந்தார். 1893-ம் ஆண்டு அவர் தொடங்கிய 'பறையன்' இதழ், ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு முகாமாகத் திரட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை மைய்யக் கூறாக வைத்து இயங்கிய பத்திரிகையில், கல்வெட்டுகள், அரசு குறிப்பேடு ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் சமத்துவ சமூகத்துக்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்தார். தமது 'பறையர் மகாஜன சபை' என்ற அமைப்பின் மூலம், சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராட்டங்களைக் கட்டியமைத்தார்.
[[அயோத்திதாசர்|அயோத்திதாசரின்]] முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் [[திருமணம்]] செய்து கொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி 98 ⟶ 104:
==மறைவு==
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
ரெட்டைமலை ==அடிக்குறிப்புகள்==
|