உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
இயற்பியலாளர்களான, [[ஜான் பர்னல்]], [[எர்வின் சுரோடிங்கர்]], [[இயூஜீன் விக்னர்]], [[ஜான் அவெரி]] ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது.
 
புவியில் உயிர் 4.28 பில்லியன் ஆண்டுகள் அளவிலேயே தோன்றிவிட்டது. புவியில் நீர் தோன்றி, 4.41 பில்லியன் ஆனுகளுக்கு முன்பு கடல்கள் உருவானதும் உயிர் தோன்றியுள்ளது. அதாவது 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதும் நெடுங்காலம் எடுத்துகொள்ளாமல், சிறிய காலத்துக்குப் பிறகே உயிர் முகிழ்த்துவிட்டது.<ref name="NAT-20170301" /><ref name="NYT-20170301" /><ref name="BBC-20170301" /><ref name="4.3b oldest" />/> புவியில் அண்மையில் நிலவும் உயிர் ஆர் என் ஏ உலகில் இருந்து மரபாக வந்ததாகும். ஆர் என் ஏ உயிர்வகைதான் முதலில் தோன்றியதா என்பதும் இன்னமும் உறுதியாகவில்லை. புவியில் உயிரிலிவழியாக உயிர் எந்நிகழ்வு அல்லது இயங்கமைப்பு உருவாகியது என்பது இன்னமும் அறியப்படவில்லை. என்றாலும் பல கருதுகோள்கள் உருவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மில்லர்-யூரே செய்முறையைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பழைய அறியப்பட்ட உயிர் வடிவங்களாகக் குச்சுயிரிகளின் புதைபடிவங்களே கிடைத்துள்ளன. அறிவியலாளர்கள் 2016 ஜூலையில் இன்று நிலவும் அனைத்துயிரிகளுக்கான மிக அனைத்துப் பொதுவான மூதாதையில்(LUCA) 355 மரபன் கணங்கள் உள்ளனவாக இனங்கண்டுள்ளனர்.<ref name="NYT-20160725">{{cite news |last=Wade |first=Nicholas |authorlink=Nicholas Wade |title=Meet Luca, the Ancestor of All Living Things |url=https://www.nytimes.com/2016/07/26/science/last-universal-ancestor.html |date=25 July 2016 |work=[[New York Times]] |accessdate=25 July 2016 }}</ref>
 
முதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. .உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்டமைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்கலப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது