இராஜாதிராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
'''இராஜாதிராஜ சோழன்''' முதலாம் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] பேரனும், [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனின்]] மகனும் ஆவான். இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் [[சேரர்|சேர]], [[பாண்டியர்|பாண்டிய]] நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் [[சாளுக்கியர்]]கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியரோடு போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, [[துங்கபத்திரை]] ஆற்றை அண்டிய கொப்பத்தில் நடைபெற்ற போரில் இறந்தான்.
 
==முதலாம் இராஜேந்திரனின் மக்கள்==
 
வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய [[இராஜராஜ சோழன்|இராஜராஜனும்]], அவனுடைய திறமை மிக்க மகன் [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரன்]] காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரனுக்குப்]] பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர்.
 
===அரியணையேறிய வரிசை===
 
[[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரனுக்குப்]] பிறகு அரியணையேறியவன் மூத்த மகன் [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜன்]] என்று [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரனின்]] கன்னியாகுமரிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரனை]] அடுத்து அரியணையேறிய மூன்று மன்னர்களின் கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜனின்]] 35-ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று 'தம்பித் துணைச் சோழ வளநாடு' என்ற முக்கியமான பெயரைக் குறிப்பிடுகிறது. இப்பெயர், 'திருமகள் மருவிய' என்று தொடங்கும் [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரனின்]] மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ளா செய்தியை நினைவூட்டுகிறது. இம்மெய்க்கீர்த்தியில் சாளுக்கியருக்கு எதிரான போரில் எவ்வாறு தன் மூத்த சகோதரன் [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜனுக்கு]] பெருந்துணையாக இருந்தான் என்பதை [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திரன்]] கூறுகிறான்.
 
[[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] என்பவன் [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர தேவனின்]] தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திரன்]] அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரனின்]] கல்வெட்டு ஒன்று இவன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]] கங்கை, பூர்வதேசம், கடாரம் ஆகிய நாடுகளை வென்றவன் என்று குறிப்பிடுகிறது.
 
இம்மன்னர்களது கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஆண்டுகளைப் பார்க்கும்போது, இவர்களது ஆட்சிக் காலங்களில் ஒன்றோடொன்று இணைந்து இருப்பது விளங்கும். [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜன்]] தன் தந்தையுடன்[[இராஜேந்திர சோழன்|தந்தை]]யுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கதூ. [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜனின்]] கல்வெட்டுக்களிலிருந்து இவனுடைய ஆட்சி ஆண்டு 36 என்பது புலனாகின்றது. அதாவது கி.பி 1053 - 54 வரை. [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]] கி.பி 1052ம் ஆண்டு மே திங்கள் 28ம் நாளன்று அரியணை ஏறினான். அதே போன்று இராண்டாம்[[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]] கி.பி 1064வரை சுமார் 12 ஆண்டுகள் அரசாண்டான். [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] கி.பி 1062 - 63ம் ஆண்டு அரியணை ஏறினான். இவ்வாண்டே இம்மன்னனது கல்வெட்டுகளில் இவனது முதலாவது ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது.
 
===இராசமகேந்திரன்===
 
[[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] அரியணையேரும் முன் இராஜகேசரி இராஜமகேந்திரன் அரியனையேறினான். இவனுடைய மூன்றாம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இம்மன்னன் மனுநீதிப்படி ஆட்சி செய்ததாக இவனுடைய மெய்க்கீர்த்தி கூறுகிறது, இதையே கலிங்கத்துப் பரணியும் உறுதிப்படுத்துகிறது. கொப்பம் போரில் முடிசூடின மன்னனுக்கும்([[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]]) கூடல் சங்கமத்தில் வெற்றி பெற்ற மன்னனுக்குமிடையில்([[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]]) 'முடி சூடியவன்' என்று [[கலிங்கத்துப் பரணி]] இம்மன்னனைப் பற்றி கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் இராஜமகேந்திரனின் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளதூ.
 
'போர் யானையின் மூலம் ஆகவமல்லன் ஆற்றங்கரையிலிருந்து புறமுதுகிட்டு ஓடச் செய்தான்' என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது.
 
இவன் [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர தேவனின்]] புதல்வனாதல் கூடும், [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரனின்]] 9ம் ஆண்டு கல்வெட்டில் கூறப்படும் இராஜேந்திரன் என்பது இவனது இயற்பெயராகும். இதன் பின்னர் இவன் இளவரசப் பட்டம் பெற்ற பொழுது இராஜமகேந்திரன் என்ற பெயரைப் பெற்றிருக்கக்கூடும். தன் தந்தை [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர தேவன்]], தன் பாட்டனார் [[இராஜேந்திர சோழன்]] ஆகியோரிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் வகையில் இவன் இப்பெயரை ஏற்றிருக்க வேண்டும். இராஜமகேந்திரன், [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திரன்]] இருவருமே வீரராஜகேசரிப் பட்டம் பெற்றவராயிருந்தும் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்தனர். இளவரசுப் பட்டம் பெற்ற போதே ஒருவன் இறந்ததால் இந்நிலை ஏற்பட்டது.
 
இவ்வரலாற்றுக் குறிப்புக்களை ஆதாரமாக வைத்து சோழ அரியணையைப் பெற்ற மன்னர்களின் பட்டியலை கால வரிசைப்படி கீழ்க்காணுமாறு வரிசைப்படுத்தலாம்.
வரிசை 32:
|-
| 1
| [[இராஜாதிராஜ சோழன்|முதலாம் இராஜதிராஜ ராஜகேசரி]]
| கி.பி 1018 - கி.பி 1054
|-
| 2
 
| [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரப் பரகேசரி(முதல் மன்னனின் தம்பி.)]] இராஜ மகேந்திர ராஜகேசரி.(இரண்டாம் மன்னனின் மகன்)
| கி.பி 1052 - 1064
|-
| 3
| [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன் ராஜகேசரி.]](முதல் இரண்டு மன்னர்களின் தம்பி)
| கி.பி 1063 - 1069
|-
வரி 47 ⟶ 48:
| கி.பி 1067/68 - 1070
|}
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/இராஜாதிராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது